கோவை, ஜன.7- ஒன்றிய அரசு அறிவித்துள்ள சுற் றுச்சூழல் வரைவு மசோதாவை எதிர்த்து வால்பாறையில் உள்ள அனைத்து கட்சி, வியாபாரிகள் சங் கம் மற்றும் மக்கள் உரிமை மீட்பு குழு ஆகியோர் இணைந்து கடை யடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஒன்றிய அரசு மசோதாவில் குறிப் பிட்டுள்ள ஆழியார் செக் போஸ்ட் மாலை ஆறு மணி உடன் அடைக்கப் படும். புதிய கட்டிடங்களுக்கு அனு மதி கிடையாது. சுற்றுலாத் தலங்க ளுக்கு அனுமதி கிடையாது. தேயிலை உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் செயல்பட தடை. கட்டி டங்கள் சாலை விரிவாக்கம் செய்ய தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடு களை சுற்றுச்சூழல் மசோதாவில் குறிப்பிட்டுள்ளது, இந்த மசோ தாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று 24 மணி நேரம் வால்பாறை மற்றும் சோலை யார் பகுதிகளில் வியாபாரிகள் கடை யடைப்பு செய்து வால்பாறை காந்தி சிலை அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வால்பாறை வர்த் தக வியாபாரிகள் சங்க நிர்வாகி ஜெபராஜ் கூறுகையில், வால்பாறை பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் சாலை மறியல், உண்ணாவிரதம் நடத்த நேரிடும், என்றார். இந்த ஆர்ப்பாட்டத் தில் வால்பாறை சிறு வியாபாரிகள், காட்டேஜ் உரிமையாளர்கள் பொது மக்கள் என ஆயிரத்துக்கு மேற்பட் டோர் பங்கேற்றனர்.