நாமக்கல், மே 29- கார் ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணிய வில்லை எனக் கூறி சேலம் நகர டிராபிக் போலீ சார் ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை கட்ட குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வசிப்பவர் வெற்றிவேல். இவர் டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வரு கிறார். இந்நிலையில் இவருக்கு தனது செல் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், சேலம் சாலையில் காரில் செல்லும் பொழுது, ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக குறுஞ்செய்தி யில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதில் வெற்றிவேலின் வீட்டு முகவரி, கார் எண் உள்ளிட்டவை குறிப்பி டப்பட்டுள்ளது. இதனை கண்டு வெற்றிவேல் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கூறு கையில், கடந்த ஒரு வார காலமாகவே வெளி யில் எங்கும் செல்லாமல் கார் தனது வீட்டின் வெளியிலேயே நிறுத்தி வைத்துள்ளேன். இந்நிலையில், சேலம் நகர போக்குவரத்து காவல் துறை இந்த அபராத தொகை குறுஞ்செய்தி எனக்கு அனுப்பியுள்ளனர். வீட்டிலேயே தான் கார் நிற்கிறது. அப்படி இருக்கும் பொழுது இந்த அபராத தொகை எதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது என புரியவில்லை. மேலும், பொதுவாக கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை! இன்சூரன்ஸ் இல்லை என பல்வேறு விதங் களில் அபராத விதித்து கேள்விப்பட்டிருக் கிறேன். ஆனால், இரு சக்கர வாகன ஓட்டி களுக்கு போடவேண்டிய ஹெல்மெட்டுக் கான அபராத தொகையை, கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி அபராதம் விதித்திருக்கின்றனர். செல்லாத ஊருக்கு, போகாத பயணத்திற்கு நான் ஏன் ஆயிரம் ரூபாய் அபராத தொகை கட்ட வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து போக்குவரத்து வட்டார அலுவலக அதிகாரியிடம் கேட்ட பொழுது, வேறொரு வாகனத்திற்கு அபராத விதிப் பதற்கு பதிலாக, தவறுதலாக இந்த அபராத விதிப்பு செய்யப்பட்டு இருக்கலாம். ஒரு எண் மாறினாலும் இது போன்று நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட ட்ராபிக் போலீசாரை அணுகினால் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றனர்.