சூலூர், ஜூலை 25- சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட உடந்தையாக இருந்த தாய் மற்றும் அவரது காதலரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், சூலூர் பகுதி யைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 11 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றுவிட்டு, தனது 13 வயது மகளு டன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சென்னையைச் சேர்ந்த தனியார் பத்தி ரிகை நிறுவனத்தில் வேலை செய்து வந்த பால் பிரவீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த சில வரு டங்களாக பேசி பழகி வந்துள்ளனர். இதனிடையே அந்த பெண், தன்னை சந்திப்பதற்காக அடிக்கடி கோவை வரும் பால் பிரவீனை தந்தை என அழைக்கும்படி மகளிடம் தெரிவித்தி ருக்கிறார். அதன்படி சிறுமியும் பால் பிரவீனை அவ்வாறே அழைத்து வந்த தாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் கோவை வந்த பால் பிரவீன் சிறுமியிடம் பாலியல் சீண்ட லில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது பாட்டியிடம் தெரி வித்துள்ளார். இதையடுத்து சிறுமி தனது பாட்டியுடன் சூலூர் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாயை யும், பால் பிரவீனையும் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பால் பிரவீன் சிறுமியிடம் அத்துமீறி இருப்பதும், அதேபோல் அதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.