districts

img

30 நிமிட மழைக்கே வீடுகளுக்கு புகுந்த கழிவுநீர் சிங்காநல்லூர் கால்வாயை தூர்வார வேண்டும்

கோவை, மார்ச் 27- கோவை, சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயை முறையாக தூர்வாரப்படாமல் இருப்ப தால் 30 நிமிடம் பெய்த மழைக்கே வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது. இத னால் அப்பகுதியினர் அவதி யடைந்துள்ளனர். கோவை மாநகராட்சி வார்டு எண் 59க்கு உட்பட்ட சிங்காநல்லூரில் கிருஷ்ணம்ம  நாயக்கர் வீதி அமைந்துள்ளது. இந்த பகுதி யில் கழிவு நீர் கால்வாய் செல்லும் பகுதி யில் பாலம் அமைந்துள்ளது. இவ்வழியாக  வரும் கழிவுநீர் இந்த கால்வாய் பாலம் வழி யாகச் சென்று சிங்காநல்லூர் குளத்தை  சென்றடைகிறது. இதனிடையே, கோவையின் பல்வேறு பகுதிகளில் ஞாயிறன்று மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழைக்கே இந்த  கால்வாய் பாலம் முழுவதும் நிரம்பியது. இதனால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற் பட்ட வீடுகளில் கழிவு நீர் புகுந்தது. பொது மக்கள் பயன்படுத்தக் கூடிய தண்ணீர் தொட்டிகளில் கழிவுநீர் புகுந்ததால் அப்பகுதி  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பெய்யும் பொழுதெல்லாம் இந்த பிரச்ச னையைச் சந்தித்து வருவதாக பொதுமக்கள்  வேதனையோடு தெரிவித்தனர். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால் அப்போது மட்டும் பெயர ளவில் சுத்தப்படுத்திவிட்டு செல்வதாகவும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் உடனடியாக கால்வாய் பாலத்தை  தூர்வாரி சுத்தப்படுத்துவதோடு, வீடுகள்  அருகே இருக்கும் சாக்கடை கால்வாய் களை வாரந்தோறும் சுத்தப்படுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.