districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாலையில் ஓடும் சாக்கடை கழிவுநீர்

சேலம், பிப்.4- சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக் கடை கழிவு நீரால் நோய் தோற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக ஏற்காடு பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு சுற்றுலா  பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்ற இடமாகும். ஏற்காடு  பேருந்து நிலையத்தை சுற்றி உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிகம் சார்ந்த கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் ஓடி வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெடுஞ் சாலை துறையினர் சாலையை சீரமைக்கும் பனியின் போது சாலை ஓரத்தில் இருந்த கழிவு நீர் வாய்க்காலை மூடி கான்கிரீட் சாலை போட்டுவிட்டனர். சுமார் ஒரு கிலோமீட்டர் நீளம் உள்ள இந்த கழிவுநீர் வாய்க்கால் பாதி யில் மூடப்பட்டதால் அந்த வாய்காலில் ஓடும் கழிவுநீர் நிரம்பி வழிந்து சாலையில் செல் கிறது. கடுமையான துர்நாற்றத்துடன்  சாலை யில் ஓடும் கழிவுநீரால் பேருந்து நிலையத் திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற் றுலா பயணிகள் முகம்சுழிக்கின்றனர். சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு  நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்  உள் ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டு கின்றனர். கழிவு நீர் முறையாக செல்ல வடி கால் வாய்க்காலை சரி செய்து இந்த அவ லத்திற்கு தீர்வு காண உள்ளாட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகு தியினர் வலியுறுத்தியுள்ளனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், பிப்.4- குமாரபாளையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, கல்லூரி முதல்வர் ரேணுகா  தலைமையில் நடைபெற்றது. இதில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறும், முழக்கங்கள் எழுப்பியவாறும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி வளா கத்தில் துவங்கிய பேரணி, சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, எடப்பாடி சாலை உள்ளிட்ட பல  பகுதிகள் வழியாக வந்து கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் பேராசிரியர்கள் ஞானதீபன், ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

பாலியல் வழக்கு: 7 ஆண்டுகள் சிறை

கோவை, பிப்.4- போக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபருக்கு  7 ஆண்டு  சிறை தண்டனை மற்றும்  ரூ.5,000/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ராஜேந்திரன் (38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுக்கரை காவல் நிலையத்தின் கீழ் பதியப்பட்ட இவ்வழக் கின் விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கின் விசாரணை முடிவு பெற்று சனியன்று ராஜேந்திரனுக்கு 7  ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராத மாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சாலைப் பணியாளர்கள் முடிவு

திருப்பூர், பிப்.4- பிப்.16 ஆம் தேதியன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் ஒருபகுதியாக, திருப்பூ ரில் நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் பங்கேற்பது என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியா ளர் சங்கத்தின் திருப்பூர் கோட்ட பொதுக்குழு கூட்டம் சனியன்று பல்லடத்தில், கோட்டத்  தலைவர் ஆர்.கருப்பன் தலைமையில் நடை பெற்றது. துணைத்தலைவர் என்.சிவகுமா ரன் வரவேற்றார். கோட்டச் செயலாளர் ஆர். ராமன் விளக்கவுரையாற்றினார். இக்கூட்டத் தில், ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயி கள் விரோத கொள்கைகளை கண்டித்து நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிப்.16 ஆம் தேதியன்று நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது என்று தீர்மானிக் கப்பட்டது. மேலும் பிப்.8 ஆம் தேதி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் திருப்பூர் மாவட் டம் யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனியை கண்டித்து நடக்கும் முற்றுகை போராட்டத் தில் பங்கேற்பது, பிப்.10 ஆம் தேதி ஜாக்டோ - ஜியோ போராட்ட ஆயத்த மாநாட்டில் பங் கேற்பது, பிப்.12 ஆம் தேதி கோட்டப் பொறி யாளர் அலுவலகம் முன்பு இருந்து கோரிக்கை மனு அனுப்பும் இயக்கத்தில் பங் கேற்பது, பிப்.15 ஆம் ஜாக்டோ - ஜியோ  அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற் பது, பிப்.26 ஆம் தேதி ஜாக்டோ - ஜியோ  காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற் பது என முடிவு எடுக்கப்பட்டது. முடிவில், சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப் பிரமணியன் நிறைவுரையாற்றினார். கோட் டப் பொருளாளர் எஸ்.அண்ணாதுரை நன்றி கூறினார்.

நாளை மின்தடை

உடுமலை, பிப்.4- உடுமலை தாலூகா, கிளு வன்காட்டூர் துணை மின்  நிலையத்தில் செவ்வா யன்று (நாளை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம் பட்டி, கல்லாபுரம், செல்வ புரம், பூச்சிமேடு, மானுப் பட்டி, கொமரலிங்கம், அமரா வதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி சோதனைச்சா வடி, பெரும்பள்ளம், தும்பல பட்டி, குருவப்பநாயக்க னூர், கொழுமம், ருத்திராபா ளையம் உள்ளிட்ட பகுதிக ளில் நாளை மின்விநியோகம் இருக்காது.

தண்ணீர் என நினைத்து பெட்ரோலை குடித்த குழந்தை பலி

கோவை, பிப்.4- தண்ணீர் என நினைத்து பெட்ரோலை குடித்த 3 வயது  குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீபால் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் கோவை தெப்பக்குளம் மைதானம் தியா கராய வீதியில் வசித்து வருகிறார்.  இந்நிலையில், வெள்ளி யன்று ராஜவீதி சவுடம்மன் கோவில் பகுதியில் உள்ள இவரது  உறவினரின் வாட்ச் கடைக்கு தனது மூன்று வயது குழந்தை யான இமன்ஷு- வை அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத வித மாக அங்கு வைத்திருந்த வெள்ளை பெட்ரோலை தண்ணீர்  என நினைத்து குடித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார், அருகி லுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.  பின்னர்  மேல் சிகிச்சைக்காக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந் தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே  இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தினேஷ்கு மார் உக்கடம் காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இச்சம்பவம் குழந்தையின் குடும்பத்தினர் மத்தி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கட்டிட பொறியாளர்கள் சங்கம் வேண்டுகோள்

ஈரோடு, பிப். 3- கிரசர் ஜல்லி உற்பத்தி சார்ந்த கட்டடப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்ப டுத்தி பழைய விலைக்கே கொடுக்க வேண் டும் என ஈரோடு மாவட்ட சிவில் இன்ஜினி யர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு மாவட்ட சிவில் இன் ஜினியர்கள் சங்கத் தலைவர் செந்தில்குமார்,  செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது, டீசல் விலை உயர்வோ, மூலப் பொருட்களின் விலை உயர்வோ எதுவும் இல்லாமல் உள்ளது. ஆனால், தங்களது சுய லாபத்திற்காக கடந்த  ஒரு வாரத்தில் மட்டும் கிரசர், ஜல்லி உற்பத்தி  சார்ந்த கட்டுமானப் பொருட்களான எம். சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின்  விலைகள் உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை  உயர்வு கட்டுமான பணிகளை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஒரு கட்டடம் கட்டுவதற்கு சதுர  அடிக்கு விலை ரூ.2250 என்று இருந்த நிலை  மாறி, தற்போது ரூ.2500க்கு மேல் செல வாகிறது. இதனால் வீடு கட்டிக் கொண்டி ருக்கும் பொதுமக்கள் மீது கூடுதல் பொருள்  சுமை ஏற்றும் சூழல் உருவாகிறது. அது ஒரு  புறம் இருந்தாலும், இந்த விலைவாசி உயர் வால் கட்டடத்தை முழுமையாக முடிக்கா மல் பாதியில் நிறுத்தும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 1000க்கும் மேற் பட்ட பொறியாளர்கள், 50க்கும் மேற்பட்ட ஒப் பந்ததாரர்கள் என இத்தொழிலை நம்பி சுமார்  3லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த  காரணம் இல்லாத திடீர் விலை உயர்வால்  தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. அரசின் கட்டுமான பணிகளை ஒப்பந்தம்  எடுத்து செய்பவர்களும் இந்த விலையேற்றத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எம். சாண்ட், பி.சான்ட் மற்றும் ஜல்லி ஆகியவை மீண்டும் பழைய விலைக்கே கிடைக்க அரசு  வழிவகை செய்ய வேண்டும் என வேண்டு கோள் விடுத்தனர்.

மாஸ்டர் பிளானுக்கு அரசு ஒப்புதல்: கருத்து கேட்க திட்டம்

கோவை, பிப்.4- கோவை மாவட்டத்தின் புதிய ‘மாஸ் டர் பிளானுக்கு’ அரசு ஒப்புதல் அளித் துள்ள நிலையில், இது தொடர்பாக இணையத்தில் கருத்து கேட்க திட்டமி டப்பட்டுள்ளது. மாவட்டங்களில் நிலங்களைச் சரி யான முறையில் கையாள்வது, பொது சுகாதாரம், பாதுகாப்பு ஏற்படுத்துவது, மக்கள் தொகை, பொருளாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து உள்ளிட்ட வற்றுக்கு ஏற்றாற்போல, தொலை நோக்குப் பார்வையுடன் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடுவது ஒரு மாவட்டத்தின் ‘மாஸ்டர் பிளான்’ எனலாம். கோவை மாவட்டத்தின் ‘மாஸ்டர் பிளான்’ கடந்த 1994 -ஆம்  ஆண்டு செயல்படுத்தப்பட்டது. அதன்  பிறகு, பல்வேறு காரணங்களால் ‘மாஸ் டர் பிளான்’ புதுப்பிக்கப்படவில்லை. கோவை ‘மாஸ்டர் பிளான்’ திட் டத்தை வெளியிடக்கோரி தொழில் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து வலியு றுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், 30  ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண் டும் புதுப்பிக்கப்பட்டு அதன் வரைவு அறிக்கை மாவட்ட நிர்வாகத்தால் கடந்த  அக்டோபர் மாதம் அரசிடம் சமர்ப்பிக் கப்பட்டது. இந்நிலையில், அதற்கு கடந்த ஜனவரி 20-ஆம் தேதி ஒப்பு தல் கிடைத்துள்ளது. அதில், மாநகரில்  8 குளங்களை இணைக்கும் வகையில்  பசுமை வழித்தடம், கருமத்தம்பட்டி, சூலூர், மதுக்கரை, போளுவாம்பட்டி,  மலுமிச்சம்பட்டி, நரசிம்மநாயக்கன் பாளையம், கோவில்பாளையம் பகுதிக ளில் சரக்கு முனையங்கள், வெள்ள லூர், நீலாம்பூர், வெள்ளமடையில் பேருந்து நிலையங்கள் இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையின் புதிய மாஸ்டர் பிளான் தொடர்பாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு, க்யூ  ஆர் கோடு மூலம் மாஸ்டர் பிளான் வரை வைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. விரைவில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு, 2 மாதங்கள் இது  தொடர்பான யோசனைகள், ஆட்சேப னைகள் பெறப்பட்டு, அதன் பிறகு  புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்ப டும் என கோவை மாவட்ட நகர ஊரமைப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை: இளைஞர் கைது

கோவை, பிப்.4- பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா பறிமு தல் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீ சார் கைது செய்தனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினர் வளமீட்பு பூங்கா பகுதிக்கு  அருகே வாகன சோதனையில், ஈடுபட்டனர். அப்போது,   கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த பெரியநாயக்கன்பா ளையம் பகுதியைச் சேர்ந்த சபரி (24) என்பவரை போலீசார்  கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமு தல் செய்த போலீசார், சபரியை சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் உத்தரவுக்கிணங்க, கடந்த ஜன.1 ஆம் தேதி  முதல், தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடு பட்ட 15 நபர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. மேலும், 8.910 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா  மற்றும்  கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண் ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என போலீ சார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.