districts

img

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

நாமக்கல், பிப்.5- திருச்செங்கோட்டில் குடியிருப்பு பகுதி அருகே கழி வுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் கூட்டப்பள்ளி காலனி அமைந்துள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. கூட்டப்பள்ளி பகுதியை ஒட்டி, 11  ஏக்கரில் ஏரி ஒன்று உள்ளது. நகராட்சி குப்பை கிடங் காக கூட்டப்பள்ளி ஏரி மாறியதால், ஏரி சுருங்கி கழிவு நீர் ஓடையாக மாறிவிட்டது. மக்களின் பல்வேறு போராட் டங்களுக்கு இடையே கூட்டப்பள்ளி பகுதியில் குப்பை  கொட்டுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திருச் செங்கோடு நகராட்சி நிர்வாகம் கூட்டப்பள்ளி பகுதி யில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு  செய்து, இடத்தை தேர்வு செய்தது. இதனையறிந்த அப் பகுதி பொதுமக்கள், கடந்த ஜன.30 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வருவாய் கோட் டாட்சியர் மற்றும் திருச்செங்கோடு நகராட்சி நிர்வா கத்திடம் மனு அளித்தனர். இந்நிலையில், இரண்டாம் கட்ட போராட்டமாக புதனன்று கூட்டபள்ளி பகுதியில்  உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கூட்டப்பள்ளி ஏரியை தூர்வாரி நீர்நிலையாக மாற்ற வேண்டும். ஊருக்கு வெளியே ஏதாவது ஒரு  இடத்தை தேர்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள வலி யுறுத்தியுள்ளனர்.