districts

img

பனியன் நிறுவனத்தில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

திருப்பூர், ஜன. 14 - திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில்  ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப் புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலா கின. திருப்பூர் கல்லூரி சாலை காமாட்சிபுரம் பகுதியில் கார்த்தி என்பவருக்கு சொந்த மான காருண்யா பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை  நெருங்கிய நிலையில் அங்கு வேலை  செய்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழி லாளர்களுக்கு வெள்ளிக்கிழமை வேலை முடித்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதை அடுத்து தொழிலாளர்கள் அனைவரும் புறப் பட்டுச் சென்றனர். பூட்டப்பட்டிருந்த இந்த நிறு வனத்தின் முதல் தளத்திலிருந்து சனிக்கி ழமை பிற்பகல் கரும் புகை மூட்டத்துடன் உள்ளே தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள்ளாக முதல் தளம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத்துறை வாகனங்களுடன் மாநகராட்சி தண்ணீர் லாரி மற்றும் தனியார் லாரிகள் மூலமும் எட்டு வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு இரண்டு மணி நேரம் போராடி இந்த தீ அணைக்கப்பட்டது. விடுமுறை விடப்பட்ட நிலையில் தொழி லாளர்கள் இல்லாததால் உயிரிழப்பு உள் ளிட்ட அசம்பாவித சம்பவம் தவிர்க்கப் பட்டது. எனினும் ஆலையில் இருந்த பின்னல்  ஆடைகள், துணிகள், எந்திரங்கள் தீயில்  எறிந்து முற்றிலும் நாசமானது. மின் கசிவு கார ணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூர் வடக்கு  போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.