ஈரோடு, ஜூன் 18- மார்க்சிய சிந்தனையோடு தன்வாழ்க்கையை அர்ப்ப ணித்துக் கொண்ட முதுபெரும் தோழர் கா.ரா கொளந்த சாமி, பவானி வட்டம், பெரிய புலியூர் ஊராட்சியில் செங் கொடி இயக்கத்தின் ஸ்தாபனத்தை உருவாக்கியவர். இவ ரின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் சனியன்று அனுசரிக் கப்பட்டது. இந்நிகழ்விற்கு ஆர்.நல்லமுத்து தலைமை தாங் கினார். இதில், ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி. பழனிச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன், தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், பெரிய புலியூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் என்.பாலமுருகன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.