உடுமலை, ஜூன் 25 - கொமரலிங்கத்தில் ஏழாண்டு போராட்டத்தின் தொடர்ச்சியாக நிலம் அளந்து கொடுக்கப்பட்டது. மடத்துக்குளம் தாலுகா, கொமராலிங்கம் பேரூராட்சி யில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 67 பயனாளிளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. எனினும் வருவாய்த் துறை யினர், நிலம் அளந்து தராமல் காலதாமதம் செய்து வந்த னர். நிலத்தை அளந்து பயனாளிகளுக்கு வழங்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாக 27 ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. இதன் விளைவாக செவ்வாயன்று வருவாய்த் துறையினர் பயனாளிகளுக்கு நிலம் அளவீடு செய்து ஒப்படைத்தனர். இப்பணியில் மடத்துக்குளம் வட்டாட்சியர் முன்னி லையில் துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர் வாக அலுவலர்கள் ஈடுபட்டனர்.மார்க்சிஸ்ட் கட்சியின் தாலூகா குழு உறுப்பினர் ஆர்.பன்னீர்செல்வம், எம்.எம். வீரப்பன், ஈ.மாசாணம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.ஆறுமுகம், எம்.காந்தி, ஓய்வூதியர் சங்க வட்ட செயலாளர் எம். கருணாநிதி, வி. தொ.ச கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.