districts

img

கொமரலிங்கம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் அவசரகால வார்டுகளை அமைத்திடுக

உடுமலை, டிச.8-  கொமரலிங்கம் அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் வசிதியுடன் அவசரகால சிறப்பு வார்டுகளை அமைக் கக்கோரி வெள்ளியன்று மருத்துவ மனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மடத்துக்குளம் தாலுகா கொமர லிங்கம் பேரூராட்சியில் செயல்படும் அரசு மருத்துவமனையில் போதிய மருத்து வர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும். மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் 30 படுக் கைகளை கொண்ட சிறப்பு கட்டி டத்தை ஆக்சிஜன் வசதியுடன் ஏற்ப டுத்தி, அதை அவசரகால சிறப்பு சிகிச்சை  மையமாக மாற்றி மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று மருத்துவமனை முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா கமிட்டி உறுப்பினர் ஆறு முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூதனண், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ஆர். பன்னீர் செல் வம், கே. ஈஸ்வரன், செந்தில்குமார் மற்றும் கிளை செயலாளர்கள் ஜான்கண்ணன், முத் துசாமி, வீராசாமி, பாலமுருகன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.