உதகை, ஆக.19- கூடலூரில் மண் பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். நீலகிரி மாவட்டம், உதகை பிங்கர் போஸ்ட்டில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சா.ப. அம்ரித் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், கடந்த மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து முறை யான தகவல் கிடைக்காததால் அலைச் சல் அதிகரித்ததாக விவசாயிகள் குற்றஞ் சாட்டினர். அப்போது எதிர்வரும் காலங்களில் உரிய தகவல் தெரிவிக் கப்படும் என தோட்டக்கலை துறை சார் பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகள், கூடலூர் பகுதி யில் இந்த ஆண்டு பாகற்காய் பயிர் செய்த விவசாயிகளுக்கு பெருத்த நட் டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு இழப்பீடு கிடைக்குமா? பிரதம மந்திரி கிஷான் திட்ட கடன் மீது வட்டி தள்ளுபடி செய் யப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, பாகற்காய் பயிரில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்காக மாநில பேரிடர் நிவா ரண நிதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட் டுள்ளது, என தோட்டக்கலை அதிகாரி கள் தெரிவித்தனர். மேலும், ஒன்றிய அர சாங்கமும், மாநில அரசாங்கமும் நீல கிரி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த பகுதி யாக அறிவிக்கவில்லை. எனவே கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்ய முடி யாது, என முன்னோடி வங்கி அலுவல ரும் பதிலளித்தார்.
மேலும் விவசாயிகள், பிரதம மந்திரி விவசாய உதவித்தொகை திட்டத்தில் பலருக்கு மானியம் வரவில்லை? கூட லூரில் மண் பரிசோதனை மையம் ஏற்ப டுத்தப்படுமா? விவசாயத் துறையில் பின்னேர்ப்பு மானியம் வழங்குவதற்கு பதிலாக முன்னதாக மானியம் வழங்கப் படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 13,977 விவசாயிகள் பாரத பிரதமரின் ரூ.6000 நிதி உதவி பெற தகுதி உள்ளவர்களாக உள்ளனர். இதில் 10,253 பேரின் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டதால், கடந்த 14 ஆவது தவணை தொகை அவர்கள் பெற்றுள்ளனர். மீதம் உள் ளோருக்கு நில ஆவணங்கள் சரிபார்த் தல் உள்ளிட்ட செயல்பாடுகள் நடந்து வருகிறது விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். மேலும், கூடலூரில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் அமைக்க அர சுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள் ளது. ஒன்றிய, மாநில அரசு திட்டப்படி விவசாயிகளுக்கு முன்கூட்டியே வழங் குவது முடியாது. இதேபோல் விவசாயி கள் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தீர்வு அளிக்குமாறு வேளாண் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆட்சியர் சா.ப. அம்ரித் பேசுகையில், தேயிலை வாரி யத்துடன் நடந்த கூட்டத்தில், சிறு, குறு தேயிலை விவசாயிகளின் கோரிக்கை களை தெரிவிக்கப்பட்டுள்ளது. உரங் கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்து களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்யும் கடைகளின் மீது நடவடிக்கை எடுத்து அதன் விபரத்தினை தெரிவிக்குமாறு வேளாண்மை (தரக்கட்டுபாடு) துறை யினரிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் சிறப்பு முகாம் மற்றும் ஆவின் மூலம் விவசாயிகளுக்கு கூட்டம் நடத்த வும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.