நாமக்கல், டிச.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பழ னியப்பனின் படத்திறப்பு மற்றும் அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பொன்னி சர்க் கரை ஆலை தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி யவரும், சர்க்கரை ஆலை சம்மேளன குழு உறுப்பினரும், சர்க்கரை ஆலை சிஐடியு சங்க செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும், தீக்கதிரின் தீவிர வாசக ருமான மூத்த தோழர் எம்.பழனியப்பன், கடந்த 3 ஆம் தேதி யன்று வயது முதிர்வின் காரணமாக காலமானார். இதனையடுத்து, இவரது படத்திறப்பு காவேரி ஆர்.எஸ். சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ் வில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.பெரு மாள் படத்தினை திறந்து வைத்தார். இதில், திரளானோர் பங் கேற்று தோழர் பழனியப்பன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.