திருப்பூர், டிச.7- திருப்பூர் மாவட்டத்திலிருந்து இதுவரை 10 வாகனங்களில் நிவாரணப்பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மிக்ஜம் புயல் நிவாரணப் பொருட்களை பார்வையிட்டு, சென்னைக்கு கொண்டு செல் லும் வாகனங்களை கொடியசைத்து அமைச்சரக்ள் அனுப்பி வைத்தனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிடும் வகை யில் 5 வாகனங்களின் மூலம் ½ லிட்டர், 1 லிட்டர், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்கள் என மொத்தம் 56,956 லிட்டர் தண்ணீர் கேன்களும், 36,426 பிஸ்கட் பாக்கெட்கள், 1,900 பிரட் பாக்கெட்கள், பால் பவுடர், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும் மற்றும் 400 பெட்சீட், 400 துண்டு, 400 டிசர்ட் உள்ளிட்ட பொருட்கள் 1 வாகனத்தில் புதனன்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கொடி யசைத்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக, செவ்வாயன்று இரவு மாவட்ட ஆட்சியர் மூலம் 3 வாகனங்களும், தற்பொழுது 1 வாகனமும் என மொத் தம் 10 வாகனங்கள் திருப்பூர் மாவட்டத்திலிருந்து அத்தியா வசிய பொருட்களான குடிநீர், ஆடைகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை இதுவரை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேயர் ந.தினேஷ்குமார், மாநக ராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரயப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், துணை மேயர் ரா.பால சுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்த லைவர் இல.பத்மநாபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன், மாவட்ட நியமண அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) விஜயலலி தாம்பிகை, மாநகர நல அலுவலர் கௌரி சங்கர், திருப்பூர் வருவாய் கோட்டசியர் (பொ) ராம்குமார், உள்ளாட்சி அமைப் புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.