சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு
ஈரோடு, செப்.25- ஈரோடு மாவட்டத்தில், கொடுமுடி-மொடக்குறிச்சி தாலுகாவிற்குட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்று புதிய செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கொடுமுடி-மொடக்குறிச்சி தாலுகா கமிட்டியின் ஊஞ்சலூர் கிளைச் செயலாளராக வி.நிர்மலா தேவி, அரச்சலூர் கிளைச் செயலாளராக ஏ.பி.மாதவன், சிவ கிரி கிளைச் செயலாளராக எம்.சசி, காரணம்பாளையம் கிளைச் செயலாளராக பி.ராமகிருஷ்ணன், செட்டி பாளையம் கிளைச் செயலாளராக ஆர்.முருகேசன், மின்னப்பாளையம் கிளைச் செயலாளராக எம்.லோக நாதன், இந்திரா நகர் எம்.அண்ணாதுரை, சோழங்க பாளையம் கிளைச் செயலாளராக எம்.விஸ்வநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு, சூரம்பட்டி கிளைச் செயலாளராக கா.சசிகுமார், வீரப்பன்சத்திரம் கிளைச் செயலாளராக சி.கே.முருகேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தியூர் இடைக்கமிட்டிக் குட்பட்ட வேதகாரன் குட்டை கிளைச் செயலாளராக எல்.செல்வராஜ், கெம்மியம்பட்டி கிளைச் செயலாள ராக டி.சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சாம்சங் தொழிலாளர்களுக்கு போராட்ட நிதி அனுப்பி வைப்பு
சேலம், செப்.25- தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் போராட்ட நிதி அனுப்பி வைத் துள்ளனர். தொழிற்சங்கத்தை அங்கீகரித்து, தொழிலாளர்க ளின் கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியிலுள்ள சாம்சங் இந்திய நிறுவனத்தில் பணியாற் றும் தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் சாம் சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, சேலம் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ரூ.10 ஆயிரம் போராட்ட நிதியாக அனுப்பி வைத்தனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் கேத்தி
உதகை, செப்.24- தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறி முகப்படுத்தப்பட்ட பகுதிகளில் கேத்தி பேரூராட்சியும் ஒன்று. இந்த திட்டம், கேத்தி பேரூராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த கேத்தி பகு திக்குட்பட்ட பிரகாசபுரத்தில் சுமார் ஓரு ஏக்கர் நிலப்பரப் பில் வளம் மீட்பு பூங்கா அமைந்துள்ளது. பெயருக்கேற்ப குப்பை தளத்தின் முகப்பு பகுதியில் பல்வேறு மலர்ச் செடிகள் இயற்கை உரத்தால் செழிப்பாக வளர்ந்து பூங்காவாகவே காட்சியளிக்கிறது. நகரில் அன்றாட சேக ரமாகும் குப்பை கொட்டப்பட்டு, மட்கும் குப்பை இயற்கை உரமாகவும், மட்காத குப்பை மறு சுழற்சிக் கும் உட்படுத்தப்படுகிறது. குப்பையை கையாளும் பணி யில், பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் பி.நட்ராஜ் கூறும் போது, “கேத்தி பேரூராட்சிக்குட்பட்டு 18 வார்டுகள் உள் ளன. இதில், 15 வார்டுகளில் சுமார் 10 ஆயிரம் வீடுகளில் இருந்து குப்பை சேகரிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு மக்கும் குப்பை 2.180 டன், மக்காத குப்பை 0.820 டன் சேகரிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூ ராட்சிகளின் உதவி இயக்குநரின் வழிகாட்டுதலின் பேரில், மக்கும் குப்பையை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரம் ஒரு கிலோ ரூ.2 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், கடும் கிராக்கி கார ணமாக தற்போது ரூ.6 க்கு விற்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் 20 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இருப்பில் இருந்த உரம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 1.5 டன் உரம் இருப்பில் உள்ளது. இந்த உரத்துக்கு விவசாயி கள் முன்பதிவு செய்துள்ளனர், என்றார்.
பாலியல் துன்புறுத்தல்: வன ஆர்வலர் கைது
கோவை, செப்.25- கோவையில் இளம் பெண்ணுக்கு பாலி யல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மருத்துவரும், வன ஆர்வலருமான ஆனந்த கிருஷ்ணன் என்பவரை அனைத்து மகளிர் காவல் துறையி னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், மருதமலை அருகே உள்ள ஐஓபி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இயன்முறை மருத்துவ ரான இவர், வன ஆர்வலராக இருந்து வருகி றார். மருதமலை அடிவாரத்தில் பெரிய வீடு ஒன்றை ஆனந்த கிருஷ்ணன் கட்டி வருகி றார். கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அந்த வீட்டினை ஆழகுபடுத்த தேனி மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான பெண் ஆர்கிடெக்கிடம் பணிகளை ஒப்ப டைத்துள்ளார். வீட்டை அழகுபடுத்தும் பணி களுக்காக அப்பெண் வந்த பொழுது அவரி டம் ஆனந்தகிருஷ்ணன் பாலியல் துன்புறுத்த லில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து பாதிக் கப்பட்ட பெண் ஆகஸ்ட் மாதம் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் ஆனந்த கிருஷ்ணனை தொடர்பு கொண்ட பொழுது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத் துதல், வன்புணர்ச்சி செய்தல் ஆகிய 4 பிரிவு களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இடுக்கி அருகே உள்ள குமுளி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
புத்தகத் திருவிழா: பரப்புரை மேற்கொள்ள முடிவு
தருமபுரி, செப்.25- தருமபுரி புத்தகத் திருவிழாவை முன் னிட்டு பரப்புரை மேற்கொள்ள உள்ள தாக, தகடூர் புத்தகப் பேரவை முடிவு செய் துள்ளது. தகடூர் புத்தகப் பேரவையின் செயற்குழு கூட்டம் தருமபுரி முத்து இல்லத்தில் புத னன்று, அமைப்பின் தலைவர் இரா.சிசு பாலன் தலைமையில் நடைபெற்றுது. செய லாளர் இரா.செந்தில் புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து பேசினார். ஒருங்கி ணைப்பாளர் இ.தங்கமணி நடைபெற்ற பணி களை எடுத்துரைத்தார். இதில், அமைப் பின் பொருளாளர் கார்த்திகேயன், செயற் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அக்.4 முதல் 14 ஆம் தேதி வரை தருமபுரியில் 6 ஆவது புத்தகத் திரு விழா நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வா கம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் இப்புத்தகத் திருவிழாவை, அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். புத்தகத் திரு விழா நாட்களில் தினசரி மாலை 5 மணி அளவில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆளுமைகள் பங்கேற்கும் சொற்பொழிவு கள், பட்டிமன்றம், இலக்கியச் சந்திப்பு, நூல் கள் வெளியீடு, மாணவர்களின் கலை நிகழ்ச்சி கள் ஆகியவை நடைபெற உள்ளன. இதனை யொட்டி மாவட்டம் முழுவதும் பரப்புரை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் புத்தகத் திரு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.
பேருந்து நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி!
தருமபுரி, செப்.25- இண்டூர் பேருந்து நிலையத்தில் இருக்கைகள் இல்லாத தால், பயணிகள் மணிக்கணக்கில் நிற்கும் நிலை நிலவு கிறது. தருமபுரி மாவட்டம், இண்டூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதில் ஒரு புறத்தில் மட்டும் எட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றொரு புறத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப் படவில்லை. மேலும், பயணிகள் காத்திருக்கும் இடத்திலும் அவற்றை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தருமபுரி, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிக ளுக்கு செல்ல பேருந்து நிலையம் வரும் பயணிகள் அமர் வதற்கு இடமின்றி, மணிக்கணக்கில் நிற்கும் நிலை உள் ளது. பயணிகள் காத்திருப்பதற்காக இருக்கைகள் அமைப்ப தற்கான போதுமான இட வசதிகள் இருந்தும், அங்கு இருக்கை வசதிகள் இதுவரை ஏற்படுத்தவில்லை. எனவே, பயணிகளின் நலன் கருதி பயனிகள் அமர இருக்கைகள் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போலி வர்த்தக செயலி மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.24 லட்சம் மோசடி: இருவர் கைது
போலி வர்த்தக செயலி மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.24 லட்சம் மோசடி: இருவர் கைது
திருப்பூர், செப். 25 - பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என போலி வர்த்தக செயலி மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ 24 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த வர் ராஜேஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்குச் சந் தையில் முதலீடு செய்வது தொடர்பான வழி காட்டும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் இணைந் துள்ளார். புதிதாக மொபைல் எண்ணில் இருந்து ராஜேஷுக்கு வாட்ஸ் அப்பில் குறுந் தகவல் வந்துள்ளது. அதில் தான் ஒரு பெண் என்றும், தனக்குத் தெரிந்த ஒரு செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வும், அதற்காக இந்த பிரிபில் ஆப் (BRIIFL.apk) என்ற செயலியை டவுன்லோட் செய்யு மாறு கூறியுள்ளார். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட ராஜேஷும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். மேலும் அதில் தனது வங்கிக் கணக்கை இணைத்து பல தவ ணைகளாக சுமார் ரூ 24 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க நினைக்கும் பொழுது,மீண்டும் ரூ 10 லட்சம் கட்டினால் மட்டுமே மொத்த பணமும் கிடைக்கும் என அந்த செயலியில் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள அந்த செயலி குறித்து விசாரித்ததில், அது போலியானது என்று தெரிய வந்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற் கொண்டனர். ராஜேஷ் தனது வங்கியில் இருந்து எந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார் என்பது குறித்து விவரங் களை சேகரித்து வங்கியின் உதவியுடன், பணம் பெற்றவரின் வங்கி கணக்கு விவரங் களை சேகரித்தனர். அந்த வங்கிக் கணக்கு கள் மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகு தியை சேர்ந்த அப்துல் காதர் ஜெய்லானி (41), திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப் பட்டி சேர்ந்த மைதீன் பாட்ஷா (37) என்போ ருக்கு சொந்தமானது என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் போலியாக செயலியை உருவாக்கி, இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, பெண் போல் குறுந்தகவல் அனுப்பி ஆள்மாறாட்டம் செய்து பண மோசடி செய் தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்த னர். இருவரையும் நீதிமன்றத்தில் நேர்ந்ருத்தி, சிறையில் அடைத்தனர்.
ஆபாசமாகப் பேசும் கந்துவட்டி கும்பல்
திருப்பூர், செப். 25 - திருப்பூரில் அதிக வட்டி கேட்டு ஆபாசமாக பேசும் கந்துவட்டி கும்பல் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையததில் மனு அளித்தனர். திருப்பூர் காங்கேயம் ரோடு சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மற்றும் சத் திய பிரியா தம்பதியினர். இவர்கள் தொழில் நிமித் தமாக அப்பகுதியை சேர்ந்த தமிழரசி என்பவரிடம் ரூ.35 ஆயிரம் வாங்கிய நிலையில் ரூ.80 ஆயிரம் கடன் பணத் தைத் திருப்பி செலுத்தினர். இந்த நிலையில் மீண்டும் 85 ஆயிரம் ரூபாய் கட்ட சொல்லி கந்து வட்டி கும்பல் வற்புறுத்தி உள்ளது. அதே போல் சுந்தரி என்ப வரிடமும் சத்திய பிரியா ரூ.35 ஆயிரம் பணம் வாங்கிய நிலையில் வட்டியோடு சேர்த்து ரூ.44 ஆயிரம் பணம் கட்டி இருக்கிறார். மேலும் ரூ.47 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என சுந் தரி மிரட்டி வருவதோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் பேசுவதாக சத்திய பிரியா கூறினர். இத னால் பாதிக்கப்பட்ட ராஜா குடும்பத்தினர் கடந்த வாரம் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் மனு அளித் தார். எனினும் போலீசார் நட வடிக்கை எடுக்காமல் அலட் சியமாக இருந்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன் அடியாட்களுடன் வந்த தமி ழரசி மற்றும் சுந்தரி இருவ ரும் வீட்டில் இருந்த சத்திய பிரியாவை தாங்கியதாகத் தெரிகிறது. எனவே தனக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும், தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சத்திய பிரியா, ராஜா தம்பதியினர் மற்றும் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தினர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட் டனர். கந்து வட்டி கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்த னர். காவல் ஆய்வாளர் நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
ஆசிரியர்கள் நூதனப் போராட்டம்
ஈரோடு, செப்.25- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 11 ஆண்டு களாகியும் பணி வழங்கப்படாமல் தவிப்பதாக பட்டதாரி கள் காதில் பூ வைத்துக் கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் காளை மாட்டு சிலை அருகில் தகுதி தேர் வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 11 ஆண்டுகளாகியும் பணி வழங்கப் படாததால் காதில் பூ வைத்துக் கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்பவர்க ளுக்கு இன்னொரு தேர்வு என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி அரசாணை எண் 149 மறு நியமன போட்டித் தேர்வு முற்றிலும் நீக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச்சங்க இளங்கோவன் தலைமை வகித் தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆண் மற் றும் பெண் பட்டதாரிகள் காதில் பூ வைத்தவாறு பங்கேற்ற னர்.
திருப்பூரில் வங்க தேசத்தினர் கைது
திருப்பூர், செப்.25- திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவுப் படையி னர் செவ்வாயன்று மத்திய பஸ் நிலையம் பகுதியில் சுற் றித்திரிந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆதார் உள் ளிட்ட ஆவணங்களை வாங்கி பரிசோதனை செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் வங்கதேச நாட்டின் அடையாள ஆவணங்கள் இருந்தது. விசாரணையில் அவர் கள் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வடமா நில தொழிலாளர்கள் போல் வேலைக்கு வந்துள்ளனர். அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இவர்களின் அடையாள ஆவ ணங்களை சரிபார்த்த போது வங்கதேசத்தினர் என்பது தெரி யவந்துள்ளது. இதனால் அவர்களை வேலைக்கு அமர்த்தா மல் அங்கிருந்து அனுப்பி விட்டனர். இதைத் தொடர்ந்து 6 பேரும் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்கள். உரிய ஆவணங்கள் எதுவும் இல் லாமல் இந்தியாவுக்கு வந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் வங்கதேச நாட்டின் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்த தன்வீர் (வயது 39), ரசிப் தவுன் (43), முகமது அஸ்லம் (41), முகமது அல் இஸ்லாம் (37), முகமது ராகுல் அமின் (30), சவுமுன் ஷேக் (38) என்பது தெரியவந்தது. 6 பேரையும் தெற்கு போலீ சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலைச்சோலை கிராமத்திற்கு பேருந்து வசதி: ஆட்சியர் தகவல்
சேலம், செப்.25- தலைச்சோலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், வாழ வந்தி கிராமத்தில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சி யர் ரா.பிருந்தாதேவி தலைமையில் புதனன்று நடைபெற் றது. இந்நிகழ்வில் அவர் பேசுகையில், பட்டிப்பாடி வேலூர், சொனப்பாடி, புளியங்கடை ஆகிய பகுதிகளில் சாலைப் பணி களும் விரைவில் தொடங்கப்படும். மக்களைத் தேடி மருத்து வம் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண விகளின் பாதுகாப்பிற்காக அரசு விடுதிகள் செயல்பட்டு வரு கிறது. தலைச்சோலை பகுதி பொதுமக்களின் கோரிக்கைக் கேற்ப பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 153 பயனாளிக ளுக்கு ரூ.21.48 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன, என்றார். இந்நிகழ்ச்சியில், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கு. சித்ரா, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அ.அபிநயா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண் குழந்தையை விற்க முயன்ற தந்தை கைது
சேலம், செப்.25- எடப்பாடி அருகே பெண் குழந்தையை விற்க முயன்ற தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தூர் கிராமம், திம்பத்தியான் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (32). இவரது மனைவி குண்டுமல்லி. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்க ளுக்கு 5 குழந்தைகள் இருந்த நிலையில், இத்தம்பதிக்கு அண்மையில் 6 ஆவதாக பெண் குழந்தை பிறந்துள் ளது. அந்த பெண் குழந்தையை சேட்டு, இடைத்தரகர்கள் மூலம் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் இந்த குழந்தையை சட்ட பூர்வமாகவே தான் தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறி, சேலத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளார். இதுகுறித்து சம்பந் தப்பட்ட அலுவலர்கள் சேட்டுவை பிடித்து விசாரணை மேற் கொண்ட போது, ஏற்கனவே தனக்கு பிறந்த 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையை தலா ரூ.1 லட்சத்துக்கு இடைத்தரகர் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ததும், தற்போது பிறந்த பெண் குழந்தையை குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து சேட்டுவை கைது செய்த போலீசார், தொடர்ந்து அவர்கள் குழந்தைகளை விற்பனை செய்த விவரம் குறித்தும், அதற்கு துணையாக செயல்பட்ட இடைத்தரகர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.