கோவை, பிப்.15- வடவள்ளி பகுதியில் உள்ள நேர்டு தொண்டு நிறுவன வளாகத்தில் உள்ளாட்சி நிர்வாகம், கிராம சபை, உள்ளாட்சி தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. உள்ளாட்சி நிர்வாகம் மற் றும் உள்ளாட்சி தேர்தல்க ளின் முக்கியத்துவம், கிராம சபை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நேர்டு தொண்டு நிறுவன வளாகத்தில் சனியன்று நடைபெற்றது. நேர்டு தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பில் நடை பெற்ற இந்த கருத்தரங்கில் தன்னாட்சி, அறப் போர் இயக்கம், மக்களின் குரல், தோழன் மற்றும் அடிமட்ட ஆளுமை நிறுவனம் போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கருத்தரங்கை நேர்டு தொண்டு நிறுவன இயக்குனர் பேராசிரியர். முனை வர். சௌ.காமராஜ் துவக்கி வைத்தார். கருத்தரங்கில் செள.காமராஜ் பேசுகை யில், வருடத்தில் 6 முறைகள் நடத்தப்படும் கிராம சபைக்கூட்டத்தின் முக்கியத்துவம், கிராமங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் கிராம வாசிகள் வாழ்வாதார முன்னேற்றம், ஊராட்சி மக்களின் சிறந்த முறையில் செயல்பட வேண் டியதன் முக்கியத்துவம் மற்றும் ஊரக ஊராட்சி தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. கடந்த மாதம் ஜன.5 ஆம் தேதியுடன் 28 மாவட்டங்களில் 9,624 கிராம ஊராட்சித் தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஒன்றியக் கவுன்சிலர்கள் மற்றும் 515 மாவட்டக் கவுன்சிலர்கள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 243E(a) ஊரக உள் ளாட்சிகளின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் முடியும் முன்பு அவற்றுக்கான தேர்தல் நடத்தி முடிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. எதிர்பாராத பேரிடர் காலங்கள் தவிர்த்து, வேறெந்த காரணத்திற்காகவும் 243E பிரிவை கடைபிடிக்காமல் இருக்கக்கூடாது. உடனடியாக இந்த உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும், என்றார். இக்கருத்தரங்கில் தன்னாட்சி அமைப் பின் துணைத்தலைவர் நந்தகுமார், இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் டென்னிஸ் கோவில் பிள்ளை, தன் னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளர் சர வணன், செயல் நிறுவனத்தின் நிர்வாகி கதிர வன், சமூக ஆர்வலர் பொறியாளர், மாணிக்க ராஜ், குபேர விநாயகர் மகளிர் சுய உதவி குழுத்தலைவி எஸ்.காவியம், நேர்டு தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் கீதா மற்றும் சங்கீதா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.