districts

img

கோவையில் சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம்

கோவை, அக்.11- சிட்டிசன் வாய்ஸ் கோயம்புத்தூர் தன்னார்வ அமைப்பு மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் பிஷப்  அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி யில், ‘மாய வலை’ எனும் தலைப்பில்  சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம்  செவ்வாயன்று நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணை யாளர் பாலகிருஷ்ணன் இக்கருந்த ரங்கில் தலைமை விருந்தினராக பங் கேற்று சிறப்புரையாற்றினார். ஸ்டேட்  பேங்க் ஆஃப் இந்தியாவின் பொது மேலாளர் திலிப் சிங் யாதவ், பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஜெமினா வின்ஸ்டன், சிட்டிசன் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பின் தலைவர் ஜெயராமன், நிர்வாகிகள், ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது செய்தியாளர் களிடம் கோவை மாநகர காவல் ஆணையர் கூறுகையில், ‘கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆப் கோயம்புத்தூர் மற்றும்  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோயம் புத்தூர் மாநகர காவல் இணைந்து சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி பிஷப் அப்பாசாமி கல்லூரி யில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி யில் கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டுள்ளது.

அதேபோல், சமூகவலைதளங் களை பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும், என்னென்ன தகவல் களை பகிர வேண்டும், எதை பகிர  கூடாது என்பது குறித்த ஆன்லைன்  ஒழுக்கங்கள் குறித்தும் பகிரப்பட் டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகளை குறிவைத்து சைபர் குற்றங்கள் எந்த  மாதிரியாக நடக்கிறது என்பது குறித்து  இந்த கருத்தரங்கில் விரிவாக எடுத்து ரைக்கப்படுகிறது. மாநகர காவல் பிரிவில் சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பிரிவு கள் உள்ளன. அதில் இரு பிரிவினருக் கிடையே மோதல் ஏற்படுத்தும் தகவல் கள் குறித்து கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறான தகவல்கள் பரப்புபவர்கள் அவரது அடையாளங்களை வெளிப் படுத்தாமல் பரப்புபவர். எனவே இது  போன்ற தகவல்களை கட்டுப்படுத் தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 என்ற எண்ணிற்கு 24 மணி  நேரத்திற்குள் புகார் அளித்தால் உரிய  நடவடிக்கை எடுக்கப்பட்டு இழந்த  பணம் பெற்று தரப்படும். மேலும்  சமீபத்தில் 5g குறித்த புகார்கள் பெறப் படுகிறது. எனவே, பொதுமக்கள் கவன மாக இருக்க வேண்டும்’ என தெரிவித் தார்.