districts

காட்சிப் பொருளாக இருக்கும் தொகுப்பு வீடுகள்

உடுமலை, மார்ச் 15- மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில்  உள்ள தொகுப்பு வீடுகளை பராமரித்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டியலின மக்களுக்கு தமிழ்நாடு அர சின் சார்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது. இந்த வீடு கள் தற்பொழுது மிகவும் சிதலமடைத்த நிலை யில் உள்ளன. இதனால் இங்குள்ள வீடுகள்  பயன்பாடற்று பாழடைத்த காட்சிப் பொரு ளாக காணப்படுகின்றன. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,  20 வருடங்களுக்கு முன்பு அரசாங்கத்தால்  எங்களுக்கு ஒரு அறை  கொண்ட காங்கிரீட்  வீடுகள் கட்டித் தரப்பட்டது. இந்த வீடுகளில்  தற்பொழுது மேல் பகுதி காரை இடித்துவிழும்  நிலையில் இருப்பதால் அங்கு குடியிருக்க  அச்சமாக உள்ளது. அரசு சமத்துவபுரங்களில்  உள்ள வீடுகளை பராமரித்து தருவது போல்,  இடித்து விழும் நிலையில் உள்ள எங்களின்  வீடுகளையும் சரி செய்து தர வேண்டும் என்ற னர்.