உடுமலை, செப்.3- பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், பழுத டைந்து காட்சிப்பொருளாக காணப்படும் தொகுப்பு வீடுகளை சீரமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்திற்குட்பட்ட பகுதி களில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின மக்க ளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டன. இந்த வீடுகள் தற்பொழுது மிகவும் சிதலம டைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அதிகமான வீடுகள் யாரும் பயன்படுத்த முடியாமல், பாழ டைந்து காட்சிப்பொருளாக காணப்படுகின்றன. இதுகு றித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 20 வரு டங்களுக்கு முன்பு தமிழக அரசால் எங்களுக்கு ஒரு அறை கொண்ட கான்கிரீட் வீடுகள் கட்டிதரப்பட்டன. இந்த வீடுகளில் மேல் பகுதி இடித்து விழும் நிலையில் இருப்பதால், அங்கு குடியிருக்கவே அச்சமாக உள்ளது. தற்பொழுது அரசு சமத்து வபுரங்களில் உள்ள வீடுகளை பராமரித்து தருவது போல், எங்களின் இடித்து விழும் நிலையில் உள்ள வீடுகளை சரி செய்து தர வேண்டும். இதனிடையே, தற்பொழுது இப்பகுதி யில் பருவமழை பெய்து வருவதால், கட்டிடங்கள் இடிந்து விழும் முன்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.