கோவை, மார்ச் 27- “வணக்கங்க கோயம்புத்தூர்” என்று கோவை மாநகராட்சியால் புதிய செல்பி பாய்ண்ட் அமைக்கப் பட்டுள்ளது. அதேநேரத்தில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் ஓட்டை, உடைசலான குப்பைத்தொட்டிகள் காணப்படு வது, கோவை மாநகராட்சியின் செலக்டிவ் அம்னீசியாவை வெளிப் படுத்துகிறது. நகரை அழகுபடுத்துகிறோம் என்கிற பெயரில் ஏழை, எளிய அப்பாவி உழைப்பாளி மக்களின் குடிசைகளை அகற்றி ஊரின் எல்லையில் ஒதுக்குபுறமாக குடி யமர்த்திய நடவடிக்கைகளே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யிருந்தது. எங்களது வாழ்வாதாரம் முழு வதும் நகரத்தையொட்டியே உள்ளது, எங்கள் குடிசைகளை இடிக்காதீர்கள் என்கிற அவலக் குரல், இப்போதும் எதிரொ லித்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், அழகு படுத்துகிறோம் என்கிற பெயரில், குடிசைகள் அகற்றப்பட்டு, கொழுப்பு குறைய நடப்பவர்களுக்கான நடை பாதைகள் செல்வசிந்தாமணி குளத்தையொட்டி போடப்பட் டுள்ளது.
அழகு என்பதற்கு அர்த்தம் தெரியாமலேயே ஆட்சியாளர்கள் இருக்கிறார்களோ என்கிற ஐயம் சமூகத்தை நேசிப்பவர்களுக்கு இயல்பாகவே எழுகிறது. இந்நிலையில்தான், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநக ராட்சிக்கு ஒதுக்கப்படும் கோடிக் கணக்கான ரூபாய் நிதிகள் அனைத்தும் குளங்களுக்குள்ளும், செல்வந்தர்கள் வாழும் ஆர்எஸ்.புரம் போன்ற பகுதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. சமீபத்தில் நடந்த மாவட்ட கண்காணிப்பு கூட்டத்தில் கூட எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, எந்த திட்டங் களுக்கு ஒதுக்கப்பட்டது என்கிற கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க முடியாமல் திணறியது நகைப்பை ஏற்படுத்தியது. உண்மை இதுதான் என்பது போல, கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம் படுத்தப்பட்டுள்ளது. பெரிய குளத் தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக் கைகள், நிழற்குடைகள் அமைக் கப்பட்டுள்ளது.
மேலும் திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக் கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட் டிலும், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. வாலாங் குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்வம் பதி, குமாரசாமி கிருஷ்ணாம்பதி குளங்களும் ஸ்மார்ட் சிட்டி திட் டத்தின் கீழ் மேம்படுத்தப்பட் டுள்ளன. இதில், பெரியகுளத்தின் கரை ப்பகுதியில் ‘ஐ லவ் கோவை’ என்ற செல்பி ஸ்மார்ட் அமைக்கப்பட்டது. இதனிடையே கிருஷ்ணாம்பதி குளத்தில் “வணக்கங்க கோயம் புத்தூர்” என்ற வாக்கியம் வடிவ மாக, புதிய செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நிர்ண யித்த கூலி வேண்டும் என தூய் மைப்பணியளார்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களின் நியாயமான கோரிக் கைகள் நிறைவேற்ற மறுக்கிறது. மாநகரத்தின் வீதிகளில் கொட்டப் படுகிற குப்பைகளை அள்ள இரண்டு கரங்களைத் தவிர இந்த ஊழியர்களிடத்தில் எந்த உபகர ணங்களும் இல்லை. இதுபோதா தென்று, கோவை மாநகராட் சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைத்தொட்டிகள் ஓட்டை, உடைசலாக இருப்பதை வசதியாக மறந்து விடுகிறது. கோவை மாநகராட்சி அதிகாரி களுக்கு, ஸ்மார்ட் சிட்டி அதிகாரி களுக்கு செலக்டிவ் அம்னிசியா வாக இருக்குமோ என்கிற கேள்வி, குப்பைத்தொட்டியை கடந்து போகிற எவருக்கும் எழாமல் இல்லை. அங்கும், இங்கும், எங்கும் பார்த்த ஓட்டை உடைசல் குப்பைத் தொட்டி, இதோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ளது. ஸ்மார்ட் சிட்டியில் ஒரு குப்பைத்தொட்டி என்கிற ஆவணப் படத்தை யாரோ எடுக்க இருக்கிறார் களாம். சுதாரித்துக் கொள்ளுமா? கோவை மாநகராட்சி அல்லது வணக்கங்க கோயம்புத்தூர் என கும்பீடு போட்டுச்செல்லுமா என் பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.