உடுமலை, நவ.20- மாநில அளவிலான கலைத் திரு விழா போட்டிகளுக்குத் தகுதி பெற்ற மலையாண்டிபட்டினம் அரசு உயர்நி லைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவித் துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களின் தனித் திறன்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத் திரு விழா போட்டிகளில் உடுமலை வட்டம் மலையாண்டிபட்டினம் அரசு உயர்நி லைப்பள்ளியைச் சார்ந்த 48 மாணவ மாணவியர் வட்டார அளவிலான போட் டிகளில் கலந்து கொண்டனர். அதில் 25 பேர் இசை, நடனம், ஓவியம், வில்லுப் பாட்டு மற்றும் ஆங்கிலம், தமிழ் பேச்சுப் போட்டி மற்றும் சிற்பம் உருவாக்குதல் போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர். மாவட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 13 மாணவர்களில் ஆர்.ஹரிசுதன் (நவீன ஓவியம்) எஸ்.விஜய் கிருஷ்ணா (எதிர் கால கனவு) எம்.ஆசியா சுஹனா (ஆங்கில பேச்சு) ஆகிய மூன்று மாணவர்கள் மாநில அளவிலான போட்டி களில் தகுதி பெற்றுள்ளனர். இப்போட்டிகளுக்கு மாண வர்களைப் பங்குபெறச் செய்து பயிற்சி கொடுத்த ஆசிரியர் கள் கஸ்தூரி பானு, மு.சிவசுப்பிரமணி யன்,வே.மகேந்திரன், தா.மகேஸ்வரி ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் மா.சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கள் வாழ்த்தினர்.