வன அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்வு
கோவை டிச. 11- தமிழ்நாடு வன அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகி கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவை ஆர்.எஸ்.புரம் வன உயர் பயிற்சியகத்தில் தமிழ்நாடு வன அலுவலர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநிலத் தலைவராக தருமபுரியை சேர்ந்த சு.கார்த் திகேயன், செயலாளராக செல்வராஜ், பொருளாளராக கார்த் திக் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், அரசிடம் பணியாளர்களுக்கு தேவையான நலன் களை பெற நடவடிக்கை தொடர் எடுக்கவும், தமிழக அரசின் முக்கிய கொள்கையான 33 சதவிகித வனப்பரப்பை அதிக ரிக்கும் திட்டத்தை வெற்றிபெற வைப்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒக்கேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு
தருமபுரி, டிச.11- தமிழக கர்நாடகா காவிரி எல்லையான ஒக்கேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ கத்திற்கு காவிரி ஆற்றின் வழியாக உபரிநீர் வினாடிக்கு 883 கன அடியாக நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. தற்போது கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1195 கன அடியாக உள்ள நிலையில், அணை யில் இருந்து 583 கனஅடி நீர் வெளியேற்றப் பட்டுள்ளன. அதேபோல், கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 243 கன அடியாக உள்ள நிலையில், நீர்வெளியேற்றம் என்பது வினாடிக்கு 300 கன அடியாக உள்ளது. மேலும், காவிரி எல்லைப்பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் பெய்த மழை யால் ஒக்கேனக்கல்லுக்கு ஞாயிறன்று வினா டிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வ ரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தால் ஒக்கேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள சீனி பால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல் கின்றன.
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவி
கோவை, டிச.11- கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செம் மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வையாபுரி மற்றும் வசந்தி தம்பதியினர். இவர்களது மூன்றாவது மகள் தேவதர்ஷினி. இவர், சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலை யில் திங்களன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வ தற்காக பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது சோமனூரில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வளைவில் அதிவே கமாக திரும்பியபோது, மாணவி தேவதர்ஷினி மீது மோதி யது. இதில், அவர் சாலையோரமிருந்த புதரில் தூக்கி வீசப்பட் டார். இதில் காயமடைந்த தேவதர்ஷினியை அங்கிருந்தவர் கள் உடனடியாக மீட்டு, சூலூரில் உள்ள தனியார் மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தேவதர்ஷினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள கருமத்தம்பட்டி போலீசார், பேருந்தை பறிமுதல் செய்து விசாரணையை முன்னெடுத் துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம், இதே தனியார் பேருந்து, இதே இடத்தில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிக ளும், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரு வது குறிப்பிடத்தக்கது.
கணவர் இறப்பில் சந்தேகம் - டிஐஜியிடம் மனு
சேலம், டிச.11- கணவரின் மர்மமான உயிரிழப்பிற்கு விசாரணை நடத்த வலியுறுத்தி பழங்குடி யின பெண் சேலம் சரக டிஐஜி அலுவல கத்தில் திங்களன்று மனு அளித்தார். சேலம் மாவட்டம், வாழப்பாடி சிட்டாம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள். பழங்குடியினத்தை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவருக்கும் கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவரது கணவர் கடந்த 2022ம் ஆண்டு, விவசாய நிலத்தில் மர்ம மான முறையில் உயிரிழந்ததாக தெரிகி றது. உயிரிழந்த ராஜியின் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தார் அடக்கம் செய்து விட்ட னர். இவரது இறப்பில் சந்தேகம் இருப்ப தாக கூறி, அவரது மனைவி சின்னம்மாள் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித் தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து, சின்னம்மாள் தனது குடும்பத்துடன் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வ ரியை நேரில் சந்தித்து, கணவரின் மர்ம மான உயிரிழப்பிற்கு விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்தார்.
வீட்டுக்கு பட்டா வழங்க கோரிக்கை.
திருப்பூர், டிச.11 - திருப்பூரில் பல தலைமுறைகளாக 72 ஆண்டுகள் குடியி ருக்கும் வீட்டிற்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்த தங்கமுத்து என்பவர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருக்கும் மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் 72 ஆண்டுகளுக்கு மேலாக தனது தாய் தந்தை மற்றும் தனது குழந்தைகள் வசித்து வரும் வீட்டிற்கு மின் இணைப்பு வீட்டு வரி ரசீது ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளன. தனது தந்தை நிலவரி புல எண்:809/3 மற்றும் பட்டா எண் 959 ராமசாமி கவுண்டர் பெயரிலும், கழிவறை வசதி கொண்ட காலி பட்டா எண் 847 ரங்க கவுண்டர் பெயரிலும் இருந்து வருகிறது. எனது தந்தை மேற்படி இருவரிடமும் நீண்ட காலம் வேலை செய்து வந்ததால் எழுத்துப்பூர்வ கிரைய ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் நாங்கள் குடியிருந்து வந்தோம். எனக்கு அருகில் இருந்த ராஜேந்திரன் அவர் மனைவி சங்கீதா ஆகியோர் பெய ரில் போலி பட்டா மாறுதல் செய்து எழுத்துப்பூர்வமாக பதிவு செய்துவிட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் விசாரணை நடத்தி, பட்டாவை ரத்து செய்து சார் ஆட்சியர் உத்தரவிட்டார். எனவே 72 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டிற்கும், கழிவறை உள்ளிட்ட காலி இடத்திற்கும் பட்டா வழங்குமாறு தங்கமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.
நலவாரியத்தில் பதிவு செய்யும் வழிமுறைகளை எளிமைப்படுத்த கோரிக்கை
திருப்பூர், டிச.11- நலவாரியத்தில் பதிவு செய்யும் வழிமுறைகளை எளி மைப்படுத்த கோரி ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளர் சம் மேளனம் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியூசி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார் பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதன் ஒரு பகு தியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப் பூர் மாவட்ட ஏஐடியூசி சங்கங்கள் சார்பில் நலவாரியத்தில் பதிவு செய்யும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு உதவித்தொகை ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். விபத்து மரண உதவித் தொகையை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தினக் கூலி தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் பணப் பலன் களை விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற் பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
பெருமாநல்லூர், பழங்கரையில் நாளை மின் தடை
அவிநாசி, டிச.11- பெருமாநல்லூர், பழங்கரை ஆகிய துணை மின் நிலை யங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவ தால் புதன்கிழமை (டிச.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். மின் தடைபடும் பகுதிகள்: பெருமாநல்லூர்- பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப் பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூர். பழங்கரை- அவிநாசிலிங்கம் பாளையம், அணைப் புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதிபார்க், பழங்கரை, தேவம் பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம் பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத் துப்பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரி யாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி. வி நகர், திருநீலகண்டர் வீதி ,நெசவாளர் காலனி, எம்ஜிஆர் நகர், மகா லட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ.
டிச.13 மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அவிநாசி, டிச.11- அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்டசெயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை டிச.13 ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர் வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர் மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கலந்து கொண்டு மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்கி றார். மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, அவிநாசி மின் கோட்ட செயற் பொறியாளர் பழ.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
ரூ.18,50 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, டிச.11- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 136 விவசாயிகள் கலந்து கொண்டு 1,088 மூட்டைகள் நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு சுற்று வட்டார வியாபாரிகள் 5 பேர் கலந்து கொண்டு மறைமுக ஏலத் தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.8,000 முதல் ரூ.8,260 வரையிலும், இரண்டாம் ரக நிலக்க டலை ரூ.7,500 முதல் ரூ.8,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ. 7,500 வரையிலும் பச்சைநிலக் கடலை ரூ.4,000 முதல் ரூ.6,500 வரையிலும், ஏலம் போனது. மொத்தம் ரூ.18.50 இலட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.
நீதிமன்ற வளாகத்தில் குரங்குகள் அட்டகாசம்
தருமபுரி, டிச.11- தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அட்ட காசம் செய்துவந்த குரங்குகளை வனத்துறையினர், கூண்டு வைத்து பிடித்து சென்றனர். தருமபுரி மாவட்டம், தடங்கம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்ற வளாகம் அருகே பதிகால் பள்ளம் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகு தியில் இருந்து வரும் குரங்குகள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் குரங்குகளை பிடிக்க கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தருமபுரி வனச்சரகர் அருண்பிர சாத் உத்தரவின் பேரில், இந்த குரங்குகளை பிடித்து வனப்ப குதியில் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. வனத்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் கூண்டு வைத்து குரங்குகளை பிடித்தனர். பிடித்த குரங்குகளை தொப் பூர் வனப்பகுதியில் விடுவித்தனர். மேலும், நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிக அளவில் இருப்பதாகவும், வனத்துறையினர் இங்குள்ள குரங்குகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வலிப்பு நோயால் சிறுவன் மரணம்
கோவை, டிச. 11- தாத்தாவின் இறுதிக்காரியத்திற்காக சென்றபோது, வலிப்பு வந்து மயங்கி விழுந்த சிறுவன் மரணித்த சம்ப வம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பூச்சியம்மாள் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (36). இவரது மூத்த மகன் நிஷாந்த் (14) இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நி லையில் கடந்த 10 ஆம் தேதி நிஷாந்த், கோவை சீரநாயக் கன்பாளையத்தில் தனது தாத்தாவின் ஐந்தாம் நாள் காரியத்திற்கு குடும்பத்துடன் சென்று இருக்கிறார். நண் பகல் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த், வலிப்பு வந்து மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக நிஷாந்தின் குடும்பத்தினர் அருகில் இருந்த தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு மருத்து வர் அளித்த பரிந்துரையின் பேரில் கோவை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு நிஷாந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அக்குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ கோல்ப் போட்டி
கோவை, டிச.11- பெங்களூரை தலைமையிடமாக கொண்டு “செஷாயர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை” கடந்த 57 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில், கோவையில் உள்ள 66 ஆயி ரம் மாற்றுதிறனாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் நோக்கில் கோல்ப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. அந்த வகை யில் கோவை கோல்ப் கிளப்புடன் இணைந்து “சேரிட்டி டோரன்மென்ட் “ எனும் கோல்ப் போட்டிகள் நடத்தப் பட்டது. செட்டிபாளையம் பகுதியில் உள்ள கோல்ஃப் கிளப் புல்வெளியில் நடைபெற்ற இதில் 96 பேர் 4 அணிகளாக கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் “புரோ வி 24” அணி 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து, கோப்பையை கைப்பற்றியது. டஸ்காட்டிக்ஸ் அணி 18 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத் தவே இதுபோன்ற போட்டிகளை நடத்துவதாக ஒருங்கி ணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
சீரான குடிநீர் விநியோகம் கேட்டு போராட்டம்
சேலம்,டிச.11- வாழப்பாடி அருகே பேளூரில் குடிநீர் வழங்காததால், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், பேளூர் பேரூராட்சி யில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். அப்பேரூராட்சியில் சரிவர அடிப் படை வசதிகள் மற்றும் குடிநீர் வழங்க வில்லை என தெரிகிறது. இதுகுறித்து பல முறை மனு அளித்தும் பேரூராட்சி நிர்வா கம் கண்டுகொள்ளவில்லை என கூறப்ப டுகிறது. இந்நிலையில், பேரூராட்சியின் கவுன்சிலர்கள் 5க்கும் மேற்பட்டோர் ஒன்றி ணைந்து, பொதுமக்களுடன் சாலை மறிய லில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து வந்த வாழப்பாடி காவல்துறையினர், மறியலில் ஈடு பட்டவர்களை சமாதானப்படுத்தி போராட் டத்தை கலைத்தனர்.
காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு
தருமபுரி, டிச.11- தருமபுரியில் 2-ஆம் நிலைக் காவலர் பணி யிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வை 7,741 போ் எழுதினர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வா ணையம் சார்பில் 2-ஆம் நிலைக் காவலர், சிறைத் துறையினர், தீயணைப்பாளர் பதவிக ளுக்கான எழுத்துத் தேர்வு, தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளி, தருமபுரி விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குண்டல்பட்டி பச்சமுத்து கலை அறிவியல் கல்லூரி, தருமபுரி ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மை யங்களில் நடைபெற்றன. இந்த தேர்வை எழுத, 8,900 பேருக்கு அழைப்பு அனுப்பட்டிருந்த நிலையில். 7,741 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 1,249 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு பணிகளை, கோவை மேற்கு மண்டல டிஐஜி சரவணன் சுந்தர், தருமபுரி மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் இளங்கோ வன், பாலசுப்ரமணியம் ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். தேர்வையொட்டி 900 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டனர்.
நகை பறிக்க முயற்சி
கோவை, டிச. 11- கோவை மாவட்டம் கரும் புக்கடை திப்பு நகரில் வசித்து வருபவர் ஆயிஷாபீ (24). கடந்த 9 ஆம் தேதி ஆயி ஷாவின் மூத்த சகோத ரியின் கணவர் ஆசாத் ஹுசைன் ஆயிஷா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த ஆயிஷாவின் மூத்த சகோ தரியிடம் கடும் வாக்குவா தத்தில் ஈடுபட்டு, தங்க நகையை தரச் சொல்லி திட்டி உள்ளார். மேலும் தனது மனைவியின் கழுத்தில் இருந்த தங்க நகையை பிடித்து இழுக்க முயற்சித் திருக்கிறார். இதில், காயம டைந்த ஆயிஷா சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, புகாரின் பேரில் கரும்புக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில்?
கோவை, டிச.11- கோவை - பெங்களூர் இடையே இம்மாத இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. கோவை - பெங்களூா் இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் என வா்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் உள்ளன. கோவை - பெங்களூர் இடையே தினசரி 7 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான ரயில்கள் கேரளத்தில் இருந்து கோவை வழியாக இயக்கப்படுகின்றன. கேரளத்தில் இருந்து புறப்படும்போதே ரயில்கள் நிறைந்துவிடுவதால், கோவையில் ஏறும் பயணிகளுக்கு ரயில்களில் இடம் கிடைப்பதில்லை. மேலும், வர்த்தக நகரங்களில் மிக முக்கியமான நகரமாக கோவை உள்ளதால், கோவை, பெங்களூர் இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி வந்தார். இக்கோரிக்கையை முன்வைத்து ரயில்வே போராட் டக்குழுவோடு இனைந்து ஏராளமான போராட்டங்களையும் முன்னெடுத்தார். இந்நிலையில், கோவை - பெங்களூர் இடையே இம்மாத இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
வாலிபர் தற்கொலை
கோவை, டிச. 11- கோவை போத்தனூர் திருமறை நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம்(62). சிப்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மகன் ரியாஷ்(24), பிகாம் படித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். ஆனால் அவருக்கு படிப் புக்கு ஏற்ற வேலை கிடைக்க வில்லை. இதனால் ரியாஷ் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரக்திய டைந்த ரியாஷ் ஞாயிறன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட தாக சொல்லப்படுகிறது. தக வல் அறிந்து வந்த போத்த னூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.