கோவை, நவ. 18 – ஆதிக்கசாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட செகுடந்தாளி முருகேசனின் 22 ஆவது ஆண்டு நினைவுதினம் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணியினர் திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். சூலூர் தாலுகா செகுடந்தாளியில் நடைபெற்ற நினைவேந் தல் கூட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச் சாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட துணை செயலாளர்கள் சுப்பிரமணியம், ரத்தின குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தாலுகா செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.