உடைக்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
தருமபுரி, அக்.19- மாட்லாம்பட்டி அருகே சட்டவிரோதமாக உடைக்கற்கள் கடத்தி வந்த லாரியை, கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலை, மாட்லாம் பட்டி அருகே கனிமவளத்துறை உதவி ஆய்வாளர் புண மாணிக்கம், வருவாய் ஆய்வாளர் அருணகிரி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழி யாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட போது, லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பிஓடி விட்டார். இதன்பின் லாரியை சோதனை செய்தபோது, அரசு அனுமதியின்றி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள உடைக்கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறி முதல் செய்த கனிமவளத் துறையினர், காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து, ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இரிடியம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி: 4 பேர் கைது
இரிடியம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி: 4 பேர் கைது கோவை, அக்.19- இரிடியம் தருவதாக கூறி ரூபாய் 2 கோடி மோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து, மூன்று பேரை தேடி வருகின்றனர். கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் முகமது என்ப வரின் மகன் அப்துல்லா அஜிஸ் (55). இவருக்கு சொந்த மான நிலம் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள் ளது. தொழிலதிபரான இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலர் அப்துல்லா அஜீசை நேரில் சந்தித்து உள்ள னர். அப்போது தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தங்களுக்கு தெரிந்த நபர்கள் அதிக அளவில் உள்ளனர் என்றும், உங்களது இடங்கள் எதையாவது விற்க வேண்டும் என்றால் தங்கள் மூலம் விற்று தருவதாகவும் அவர் கள் கூறி இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அப்துல்லா அஜீஸ் அவர்களுடன் தொடர்ந்து பேசி உள்ளார். பின்னர் கோவைக்கு வந்த அவர் அபூபக்கர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர்கள் ஒரு சிறிய பாத்திரத் தில் இரிடியும் போன்ற பொருள் ஒன்றை காண்பித்து உள்ள னர். இது நூறு சதவிகிதம் சக்தி வாய்ந்தது என்றும் இதனு டைய விலை இரண்டு கோடி ரூபாய் என்றும் கூறி இருக் கின்றனர். இதனை வாங்கி உடனே விற்றால் 10 கோடி ரூபாய் நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதையடுத்து அப்துல்லா அஜீஸ் இரண்டு கோடி ரூபாயை அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலரிடம் கொடுத்து உள்ளார். ஆனால், அதன் பிறகு அவர்கள் அந்த பொருளையும் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்து உள்ளனர். இத னைத் தொடர்ந்து அப்துல்லா அஜீஸ் கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகா ரின் பேரில் காவல் துறையினர் அபூபக்கர், ஜான் பீட்டர், செந் தில்ராஜ், ஜனகன், ஜோதிராஜ், அனில் குமார் உட்பட அவர்க ளது கூட்டாளிகள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அக்.22இல் முதல்வர் நாமக்கல் வருகை
அக்.22இல் முதல்வர் நாமக்கல் வருகை நாமக்கல், அக்.19- நாமக்கல்லில் அக்.22 ஆம் தேதியன்று நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதல்வர் வருகை தர உள்ளார். நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவச்சிலை திறப்பு விழா, நவீன ஆவின் பால்பண்ணை அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்டவை அக்.22 ஆம் தேதி யன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண் ணன் ஆகியோர் வெள்ளியன்று, பொம்மைக்குட்டைமேடு லட்சுமி திருமண மண்டபம் அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலில் ஆய்வு மேற்கொண்டனர்.
இயற்கை விவசாயத்திற்கு எந்த உதவிகளும் இல்லை: உதகை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சாடல்
உதகை, அக்.19- கூடலூர் பகுதியில் இயற்கை விவ சாயத்திற்கு விவசாயிகள் முன்னுரிமை கொடுத்து உழைக்கின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்குவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். உதகை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட் ்டம் கூடுதல் மாவட்ட ஆட்சியர் கவு சிக் தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில், தமிழ்நாடு அரசால் தோட்டக்கலை துறை மூலம் தேயிலை பறிக்கும் இயந்திரம் 50 சதவீத மானி யத்தில் தரப்படுகிறது. இதற்கு சிட்டா மற்றும் அடங்கல் கேட்கிறார் கள். கூடலூர் தாலுகாவில் பெரும் பான்மையான தேயிலை தோட்டங் களுக்கு பட்டா கிடையாது. எனவே, தேயிலை தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை கொடுக்கும் உறுப்பினர்க ளுக்கு எந்திரம் வழங்க வேண்டும், மேலும், தேனீ வளர்ப்பிற்கு கூடலூர் மற் றும் பந்தலூர் தாலுகாக்களில் சிறப்பு திட்டம் உள்ளதா எனவும் கேள்வி எழுப் பினர். இதற்கு தோட்டக்கலை இணை இயக்குனர் பதில் அளிக்கையில், மத் திய அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்க நில ஆவணம் கட்டாயம் என் றும், தேனீ வளர்ப்பிற்கு 6 விவசாயிக ளுக்கு ரூ.1.44 லட்சம் மானியத்தில் 60 தேனீ கூடுகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள் ளது. மேலும், இத்திட்டம் தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார். நீலகிரியில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விவசாயிகளுக்கு ஸ்பிரிங்லர் குழாய் இதர விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப் படுகிறது. நீலகிரி மலை மாவட்டம் என்பதால் சமவெளி பகுதியை போல குழாய்களை மண்ணுக்குள் புதைக்க முடியாது. வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, 3 ஆண்டுக்கு ஒரு முறை ஸ்பிரிங்லர் குழாய்கள் வழங்க வேண்டும். நீலகிரியில் விளையும் வாழைக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பி னர்.
நடைபாதையை விரிவுப்படுத்திடுக
உதகை, அக்.19- உதகை தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள, பயனற்ற பழைய கழிப்பறையை இடித்து நடைபாதையை விரிவுப்படுத்த வேண் டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு சீசன் மற்றும் பிற நாட்கள் என, ஆண்டுக்கு, 30 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்கா சாலையில் சுற் றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் பகுதி என்பதால், உதகை நகராட்சி சார்பில் நடைப்பாதையை ஒட்டி, இ–டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் இந்த கழிப் பறைகளை நகராட்சி நிர்வாகம் பராமரிக் காமல் விட்டதால் பயன்படுத்த முடியாத நிலையில், மூடியே கிடக்கிறது. தற்போது, நகராட்சி சார்பில் நகரில், 10 இடங்களில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10 கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. தாவர வியல் பூங்கா சாலையிலும் கட்டப்பட்டு வரு கிறது. நடைப்பாதையை ஒட்டியுள்ள பழைய கழிப்பறையை இடித்து சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி நடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
நெகிழிப் பொருட்கள் உற்பத்தி: 27 தொழிற்சாலைகள் மூடல்
சேலம், அக்.19- சேலத்தில் தடை செய்யப்பட்ட நெகி ழிப் பொருட்களை உற்பத்தி செய்த 27 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறி யப்படும் நெகிழிப் பொருட்களான கோப்பைகள், கைப்பைகள், நெய்யப்ப டாத நெகிழி கைப்பைகள், காகித தட்டு கள், டம்ளா்கள், தெர்மாகோல் கோப் பைகள், உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள்கள், தண்ணீர் பைகள், கொடிகள் போன்ற வற்றை தயாரிப்பது, சேமிப்பது, விற்பது தடை செய்யப்பட்டுள்ளன. தொடர் ஆய் வுகள் மற்றும் புகார்களின் அடிப்படை யில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து, அவற்றை மூட தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சேலத்தில் நடத் தப்பட்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்த 27 தொழிற்சாலைகள் மூடப்பட் டுள்ளன. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய் யும் தொழிற்சாலைகள் இயக்கப்படு கிறதா? என மாசு கட்டுப்பாடு அதிகாரி கள் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர். அதேபோல நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்ற னர்.
மின்வெட்டு: தொழில்துறையினர் அவதி
அவிநாசி, அக்.19- அவிநாசி, கருவலூர் பகுதியில் தினசரி மூன்று மணி நேரம் மின்வெட்டால் தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக் குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட கருவலூர் ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட விசைத்தறிகள், 80க்கும் மேற்பட்ட பனி யன் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலை போன்றவை செயல் பட்டு வருகின்றது. மின்சாரத்தை நம்பி இத்தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக, தின சரி மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் தொழில்துறையினர், மிகவும் பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து கருவலூர் மின்வாரிய அலுவலகத்திடம் கேட்டபோது, சாலை விரிவாக்கம் காரணமாக, மின் கம் பம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இதன் காரண மாக மின்தடை ஏற்படுகிறது என்கின்றனர். சாலை விரிவாக்கத் தால் மின்தடை பாதிப்பு என்றால் முன்கிட்டியே அறிவிப்பு வெளி யிட வேண்டும் மின்வாரியம் அதை வெளியிடாமல், தினசரி மின்தடை ஏற்படுவது தொழில்துறை மத்தியில் மிகுந்த சிர மத்தை ஏற்படுத்துகிறது, தீபாவளி பண்டிகையை நெருங்கு வதால் குறித்த நேரத்தில் ஆர்டர்கள் தருவதிலும் தொய்வு ஏற்படுகிறது. அதேபோல மாதாந்திர மின்தடை வெள்ளிக் கிழமை ஏற்படும் என்று அறிவித்த நிலையில் காலை 9 மணிக்கு மின்தடை ஏற்பட்டு இரவு 7 மணி கடந்த நிலையிலும் விநியோ கம் கிடைக்கவில்லை, மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகி றோம் என்கின்றனர் தொழிற்துறையினர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சீரான மின்வினியோகத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருப்பூர், அக்.19- திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் அக்.25 ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 25-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அறை எண் 240-ல் நடைபெறுகிறது. விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்க வேண்டும். இதில் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம். மேலும் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம், தங்கள் கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து பயன்பெறலாம். விவசாயிகள் நுண் ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக, வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு, வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங் கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய செயற்பொறியாளருக்கு கடுங்காவல்
திருப்பூர், அக்.19- லஞ்ச வழக்கில் கைதான மின்வாரிய செயற்பொறியாளருக்கு மூன்றாண்டு கடுங் காவல் தண்டனை விதித்து திருப்பூர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அம்மாபட்டியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் மேலாள ராக வேலை செய்து வந்தார். இவர் வேலை செய்யும் நார் தொழிற்சாலையில் ஏற்கனவே 52 குதிரைத்திறன் மின்சார இணைப்பு இருந் தது. இதை 90 குதிரைத்திறன் அளவு மின் இணைப்பு கேட்டு பெதப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த மின் இணைப்பை மாற்றி கொடுப்பதற்கு ரூ.10 ஆயி ரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அங்கு உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய சையத் பாபுதீன் (55) கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தாமோதரன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித் தார். போலீசார் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தாமோதரனிடம் கொடுத்து அனுப்பினர். கடந்த 2011 ஏப்ரல் 29 அன்று, பெதப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சையத் பாபுதீனி டம் ரூ.10 ஆயிரத்தை தாமோதரன் கொடுத் தார். அந்த நேரத்தில் ஏற்கனவே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சையத் பாபுதீனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக் கில் வெள்ளியன்று தீர்ப்பு கூறப்பட்டது. லஞ் சம் வாங்கிய குற்றத்துக்காக சையத் பாபுதீ னுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி வாதாடினார்.
இரவு வேலைக்குச் சென்ற மாணவர்களை சாதியை கேட்டு தாக்கிய காவலர்கள்!
திருப்பூர், அக்.19 - பல்லடம் அருகே இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்கள், இரவு வேலைக்குச் சென்ற கல்லூரி மாணவர்களை சாதியை கேட்டு சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், வலையபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கள் கவின், அஸ்வின், புகழேந்தி. இதில் கவின் சிக்கண்ணா அரசு கல்லூரியில் படித்து வரும் மாணவராவார். மற்றொருவரின் தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் படிப்பை பாதியில் நிறுத்தியவர் ஆவார். மூவரும் 63 வேலம்பாளையம் பகு தியில் ஒரு விசைத்தறி கூடத்தில் இரவு நேரம் வேலை செய்துள்ளனர். நள்ளிரவு 2 மணி அளவில் தேனீர் சாப்பிடுவதற்காக 63 வேலம் பாளையம் நால்ரோடு பகுதிக்கு வந்துள்ள னர். அப்போது பல்லடம் காவல்துறையின் ஆய்வாளர் ஜெயதேவி உள்ளிட்ட காவலர் கள் ரோந்துப் பணியாக அங்கு வந்துள்ளனர். சாலை ஓரம் செல்பி எடுத்துக் கொண்டி ருந்தவர்களை காவல்துறையினர் எந்த கேள்வியும் இல்லாமல் திடீரென லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மூவரும் அங்கிருந்து சிதறி ஓடியுள்ளனர். ஓடியவர்களில் இரண்டு பேரை பிடித்த காவல்துறையினர், அவர்களை சாலை ஓரம் முட்டி போட வைத்து கால் பாதத்தில் தடியால் தாக்கியுள்ளனர். மேலும். அந்த இளைஞர் களிடம் ஜாதியை கேட்டு உள்ளனர். பட்டியல் சாதியினர் என தெரிந்த நிலையில், குற்றம் செய்பவர்கள் என்று சொல்லி தாக்கியுள்ள னர். மேலும் அங்கிருந்த காவலர் ஒருவர், பதவி உயர்வு பெறுவதற்கு வழக்குப் பதிய வேண்டும் என்று சொல்லி அடித்துள்ளார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பல்லடம் வட் டாரத்தில் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப் பட்டு வைரலாக பரவியுள்ளது. கல்லூரியில் படிக்கக் கூடியவர்கள் ஏழ்மை நிலையில் இரவு நேரம் வேலைக்கு சென்றால், அவரி டம் விசாரித்து தெரிந்து கொள்வதற்கு மாறாக, காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவலர்கள் மற்றும் ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள் ளனர்.