நாமக்கல், டிச.28- விதிகளை மீறி இயங்கி வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பள்ளிபாளையம் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஆவத்திபா ளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கண பதிபாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். குமாரபாளையத்திலிருந்து வந்த தனியார் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கார் ஆம்பு லன்சாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரை பறிமுதல் செய்து பள்ளிபா ளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.