பொள்ளாச்சி, மார்ச் 14- பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருட்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்த னர். பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களை மறைமுகமாக விற்பனை செய்து வருவதாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு ரக சிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிறப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட்டு புகையிலை பொருட்களை விற்பனை செய்து வரும் நபரை தீவிரமாக தேடி வந்த நிலை யில், கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஜவஹர் (எ) சபரிகிரி (38), என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 405 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட சபரி கிரியிடம் பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.