districts

img

‘தமிழ் இனிது’ இரண்டாம் பதிப்பு வெளியீடு

கோவை, ஆக.18- எழுத்தாளர் நா.முத்துநிலவனின் ‘தமிழ் இனிது’ நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி கோவை யில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கத்தின் சிங்காநல் லூர் மற்றும் வெள்ளலூர் கிளைகள்  சார்பில், எழுத்தாளர் நா.முத்துநில வனின் ‘தமிழ் இனிது’ நூலின் இரண் டாம் பதிப்பு வெளியீட்டு விழா ஞாயி றன்று நடைபெற்றது. கோவை, பி.ஆர். புரம் பாரதி புத்தகாலய அலுவலகத் தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வெ.பெ.தர்மலிங்கம் தலைமை வகித் தார். மு.காளிநாதன் வரவேற்றார். நூலை அறிமுகம் செய்து பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மு.அன்பரசி, ஆர்விஎஸ் கல்லூரி பேராசிரியர் ப.சின்னச்சாமி ஆகியோர் உரையாற்றினர். தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் மீ. உமா மகேஸ்வரி வாழ்த்தி பேசினார். சூலூர் பாவேந்தர் பேரவை ஒருங்கி ணைப்பாளர் புலவர் செந்தலை ந.கவுத மன் சிறப்புரையாற்றினார். தமுஎகச மாநில துணைத்தலைவரும், நூலாசிரி யருமான நா.முத்து நிலவன் ஏற்புரை யாற்றினார். அர.பரணி நன்றி கூறி னார். இதில் தமுஎகச மாவட்டச் செயலா ளர் கரீம், மாவட்ட, மாநில நிர்வாகி கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர் கள் பலர் கலந்து கொண்டனர்.