திருப்பூர், ஆக.21- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் புதனன்று திருப்பூர் மாவட்டம் காங் கேயம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் காங்கேயம் வட்டம் சிவன்மலை கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவது, காங்கேயம் நக ராட்சி ஏசி நகரில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, வடசின்னாரிபாளையம் ஊராட்சி மீனம்பா ளையம் ஆதிதிராவிடர் காலனியில் வீட்டுமனை பட்டா வழங்குவது உட்பட பல்வேறு திட்டப் பணிகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சொ. சீனிவாசன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.