districts

முறையான சான்றுகள் இல்லாமல் இயங்கும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு சீல்

திருப்பூர், மே 5 - திருப்பூர் மாவட்டத்தில், முறையான சான் றுகள் பெறாமல், தனியாரால் பல மருத் துவ கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருவ தாகவும், மருத்துவ படிப்புகளை நடத்தி வரும்  இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு சீல்  வைக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம்  தெரிவித்துள்ளது.  திருப்பூர் மாவட்ட செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது: மருத்துவம் சார்ந்த கல்வி  நிறுவனங்களை நடத்த முறையாக விண்ணப் பித்து சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். முறையான சான்றுகள் இன்றி வேறு பல் கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களின் மூலம் பெறப்படும் அங்கீ காரம் செல்லத்தக்கவையல்ல. இவற்றைக் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது ஏற் பட்டுள்ளது. இல்லையெனில், அறியாமையால் அங்கீ கரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் பயி லும் பல மாணவர்களின் எதிர்காலம் மிகவும்  பாதிக்கப்படக்கூடும். மருத்துவம் சார்ந்த படிப்புகளை முடித்தவுடன் அவற்றை தமிழ் நாடு அரசால் அங்கீகரிக்கப்பபட்டுள்ள சம்பந் தப்பட்ட கவுன்சிலில் பதிவு செய்த பின்னர் தான் அதற்கான வேலை வாய்ப்பைப் பெறத்  தகுதி பெறுவர். 

அரசு அனுமதி பெறாமல் இயங்கும் கல்வி  நிறுவனங்களில் நடத்தப்படும் மருத்துவம்  சார்ந்த படிப்புகள் அங்கீகரிக்கப்படமாட் டாது. மேலும் தமிழ்நாட்டில் இயங்கும் தனி யார் கிளினிக்குகள், மருத்துவமனைகள் மற் றும் அரசு மருத்துவ நிறுவனங்கள் (முறைப் படுத்துதல்) சட்டம் 1997இன்படி பதிவு பெற வேண்டும். அங்கீகரிக்கப்படாத கல்வி நிறு வனங்களில் படிப்புகளை முடித்தவர்கள் எவ ரும் மேற்படி சட்டத்தின்படி தனியார் மற்றும்  அரசு மருத்துவ நிலையங்களில் பணி புரிய  தகுதியற்றவர்களாகவே கருதப்படுவார்கள்.  திருப்பூர் மாவட்டத்தில் மேற்படி நிபந்தனை களைப் பின்பற்றாமல் மருத்துவம் சார்ந்த படிப்புகளை சில நிறுவனங்கள் நடத்துவதாக தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து ஏப்.24  ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், காங்கயம்  வட்டம் ஓலப்பாளையம் ஸ்ரீ செல்வநாயகி மெடிக்கல் இன்ஸ்ட்யூட் ஆஃப் எலக்ட் ரோபதி ஹாஸ்பிட்டலில், திருப்பூர் மாவட் டம் நலப்பணிகள் இணை இயக்குநரால் ஆய்வு செய்யப்பட்டது.  இந்நிறுவனத்தில் டிப்ளமோ இன் மெடிக் கல் லேப் டெக்னாலஜி, எம்டி (ஈஎச்) போன்ற  படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவ்விரண்டு  படிப்புகளையும் நடத்த எந்தச் சான்றுகளை யும் பெறவில்லை. டிப்ளமோ படிப்பினை நடத்துவதற்கு சென்னை மருத்துவக் கல்வி  இயக்ககத்திடமிருந்து அனுமதியும் பெறப் படவில்லை.

இரண்டாவது படிப்பினை தமிழ்நாட்டில் நடத்துவதற்கும் இப்படிப்பினை முடித்த வர்கள் சிகிச்சையளிப்பதற்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 2020ஆம் ஆண்டு பிப்.25ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில்  தடை செய்யப்பட்டுள்ளது. எனவே உரிய  சான்றுகள் பெறாமல் மருத்துவம் சார்ந்த படிப் புகளைப் பயிற்றுவித்ததுடன் வெளிநோயா ளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதும் தெரி யவந்ததால் உயர்நீதிமன்ற மதுரை கிளை யின் தீர்ப்பினை அமல்படுத்தும் ஏப்.24 ஆம்  தேதி இக்கல்லூரி மூடி முத்திரையிடப்பட்டது. எனவே, மருத்துவக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு முன்னர் அவை தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என் பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு மாண வர்கள் மற்றும் பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோல் பிற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் பயின்ற மருத்துவம் சார்ந்த படிப்புகளை தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற கவுன்சிலில் பதிவு செய்து அனுமதி பெற்ற பின்னரே படிப்பு சார்ந்த பணியில் ஈடுபட வேண்டும். தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெறாமல் செவிலியர் படிப்புகள், மருத்துவப் படிப்பு களை சார்ந்த படிப்புகள், துணைபணிப் படிப் புகளை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்கள்  உடனடியாக மூடப்படும், அக்கல்வி நிறு வனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.