உதகை, ஜன.6- உதகை பிரிக்ஸ் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடை பெற்ற, அறிவியல் கருத்தரங்கில் ஏராமா னோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம், உதகை பிரிக்ஸ் மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், அறிவியல் கருத்த ரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சரவணசுந்தர் தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜூ சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் சமுதாயத்திற்கு நன்மையா? அல்லது தீமையா? இந்த தொழில் நுட்பத்தால் பெரும் பான்மையான மக்களுக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. ஆனால், சில விஞ்ஞானிகள் இக்கருத்து தவ றானது என கூறுகின்றனர். இதுவரையில் மனித சமுதாயம் காணாத வகையில் புதிய தொழில் நுட்பங்களும், வேலை வாய்ப்பு களும் உருவாகும் என கூறுகின்றனர். கணினி வந்த பின்னர் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகள் உருவானது குறிப்பிடத்தக்கது. ஸ்டீபன் ஹாக்கிங் என்ற உலக புகழ்பெற்ற விஞ்ஞானி தன்னுடைய கண் தசைகளை அசைப்பதன் மூலம் கணினியை இயக்கி யதும், மேலும் ஒருவர் எந்த மொழியில் பேசி னாலும் கேட்பவருடைய தாய் மொழியில் உட னுக்குடன் மொழி பெயர்த்து கொடுக்கும் அள விற்கு தொழில்நுட்பம் உயர்ந்துள்ளது. விவ சாயம் போன்ற பல துறைகளிலும் இந்த நவீன தொழில் நுட்பம் பல அதிசயங்களை நிகழ்த் தும். வீட்டு வேலை, வாகனம் இயக்குதல் போன்ற பல வேலைகளை ரோபோக்களே செய்கிறது., என்றார்.