districts

ஏற்றுமதி ஊக்கத்தொகையை அபகரிக்க நூதன மோசடி

திருப்பூர், ஜூன் 18- வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் பின்னலாடைகளுக்கு வழங்கப்படும் டிராபேக் எனப்படும் ஊக்கத்தொகையை அபகரிக்க நூதன மோசடி நடைபெறுகிறது. இதிலிருந்து ஏற்றுமதியாளர்கள் எச்சரிக் கையாக செயல்படும் படி ஏற்றுமதியாளர் சங் கம் அறிவுறுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் உறுப்பினரிடம் அவருக்கு சேர வேண்டிய டூட்டி ட்ராபேக் சுமார் 7.5 லட்சம் ரூபாய் நூதன முறையில்  மோசடி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ட்ரா பேக் தொகைகள் வரவு வைக்கப்பட்டு, பின் அந்த தொகை ஏற்றுமதியாளர்களின் அங் கீகரிக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் நடைமுறை இருந்தது. தற் சமயம் நேரடியாக அங்கீகரிக்கப்பட்ட வங் கிக் கணக்குகளுக்கே நேரடியாக தொகை கள் வரவு வைக்கப்படுகிறது. இதில் மோசடி  செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெ னில் பல அடுக்கு பாதுகாப்பு முறைகள் உள் ளது. மோசடி செய்யப்பட்ட தொகை சில வரு டங்களுக்கு முன் (2010 முதல்) எதாவது ஒரு குறைபாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட தொகையாகும். குறைபாடுகளை சரி செய்த பின்னர் சுங்கத்துறையால் வழக்க மான வங்கி வாயிலாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படாமல் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காசோலையை தவறான ஆவ ணங்களை கொடுத்து முறைகேடாக கைய கப்படுத்திய நபர், தூத்துக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு சென்று போலி யான கடிதம் ஒன்றை கொடுத்து, காசோ லையை கணக்கில் செலுத்தி அந்த தொகையை திருப்பூர் நிறுவனத்தின் பெய ரில் உத்யோக் ஆதார் ஒன்றை போலியாக பதிவு செய்து, தூத்துக்குடியில் ஒரு கிளை  நிறுவனம் உள்ளதாக தோற்றத்தை ஏற்ப டுத்தி, அங்குள்ள ஒரு வங்கியில் ஒரு கணக்கை துவக்கி அந்த கணக்கிற்கு அனுப்பி வைத்து, பணம் வந்தவுடன் ரொக்கமாக பெற்று சென்றுவிட்டார். 

கடந்த சனியன்று ஏற்றுமதியாளர் சங்க  உறுப்பினருக்கு தூத்துக்குடி வங்கியிலி ருந்து ஒரு கொரியர் தபால் வாயிலாக காசோலை புத்தகம் ஒன்று வந்துள்ளதை தொடர்ந்து, சனிக்கிழமை வங்கி விடுமுறை  என்பதால் திங்களன்று தூத்துக்குடியில் இருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு  விசாரணை செய்ததில், இந்த மோசடி கண்டறி யப்பட்டுள்ளது. உடனடியாக சங்கத்தை தொடர்பு கொண்ட உறுப்பினருக்கு வழக்கறி ஞர் உதவி மற்றும் காவல் ஆணையாளரை தொடர்பு கொண்டு பேசி புகார் உள்ளிட்ட உரிய வழிகாட்டல் வழங்கப்பட்டு மேல் நடவ டிக்கைகள் மேற்கொள்ளபப்பட்டது. திருப்பூர் காவல் ஆணையாளர் பிரச்ச னையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மாநகர குற்ற பிரிவை இந்த புகாரின் மீது விசா ரணை மேற்கொள்ள செய்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மோசடி கும்பலின் 2 நபர்களை கைது செய்துள்ளனர்.

முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள் ளார். மேற்கொண்டு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தீவிர விசாரணை நடை பெற்று வருகிறது. தூத்துக்குடி சுங்க துறையில் நிலுவை யில் இருக்கும் பல ஏற்றுமதியாளர்களின் ட்ராபேக் தொகைகள் காசோலைகளாக வழங்கப்பட்டு உள்ளது என்ற தகவலை உறுப்பினர் அங்கு நேரில் சென்று விசாரித்த பொழுது அறிய வந்த நிலையில், ஏற்றுமதி யாளர் சங்கத்திலிருந்து தூத்துக்குடி சுங்க  துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த மோசடி குறித்த விபரங்களை பகிர்ந்து கொள்ளப்பட்டது. கடந்த 6 மாதங்களில் கொடுக்கப்பட்ட காசோலைகளின் விபரங் கள்  பட்டியல் கிடைத்தவுடன் மின்னஞ்சல் வாயிலாக உறுப்பினர்களுக்கு அனுப்பப் படும். உறுப்பினர்கள் பல வருடங்களாக நிலு வையில் இருக்கும் தங்களின் ட்ராபேக் தொகைகள் எதாவது இருப்பின் அதன் தற் போதய நிலை என்ன என்பதை சரி பார்க்க வும். இந்த பிரச்சனைக்கு தொடர்பான தொகை 2015 ஆம் ஆண்டின் நிலுவை தொகை ஆகும். எனவே ஏற்றுமதியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று திருப்பூர் ஏற்று மதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பி ரமணியம் தெரிவித்துள்ளார்.