தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திங்களன்று திறக்கப்பட்டன. அதன்படி, திருப்பூரில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் என 1,882 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில், ஜெய்வாபாய் மாதிரி மாநக ராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.எஸ்.சி.அரசு மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளி லும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் இனிப்புகள் கொடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற் றனர்.
இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அவிநாசி, ஜுன் 11 – ஜுன் 12 ஆம் தேதி புதன்கிழமை அவிநாசி மின் கோட்டசெ யற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகர் வோர் குறைதீர்க்கும்
தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜுன் 12 ஆம் தேதி புதன் கிழமை காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பங்கேற்று மின் நுகர்வோர் குறை களை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய இருக்கிறார். ஆகவே மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, அவிநாசி கோட்ட செயற் பொறியாளர் பரஞ்சோதி தெரிவித் துள்ளார்.
திருப்பூரில் காயர் குழுமம் என்ற பெயரில் சுமார் ரூ.12 கோடி மோசடி
திருப்பூர், ஜூன் 11 - திருப்பூரில் காயர் குழுமம் என்ற பெயரில் சுமார் ரூபாய் 12 கோடி மோசடி செய்யப்பட்டு இருப்பதாக தலைமைச் செயலா ளர், லஞ்ச ஒழிப்புத் துறை உட்பட பல்வேறு முக்கிய அதிகா ரிகளுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அமராவதி காயர் குழும நிறுவனம் என்ற பெயரில் சுமார் ரூபாய் 9 கோடி மாநில மானிய நிதி முறைகேடு செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கேயம் காயர் குழும நிறு வனம் என்ற பெயரில் மத்திய மானிய நிதியில் சுமார் 3 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில் ஒரு சில நபர்கள் கூட்டு சேர்ந்து தொடர்ந்து சதி செய்ய முயற்சி செய்கின்றனர். ஏற்கனவே மானியத்தை கொள்ளையடித்தது தொடர்பாகவும், தற்பொழுது மீண்டும் அமராவதி காயர் குழு மம் என்ற பெயரில் மானியத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்யப்படுகிறது. எனவே இது தொடர்பாக விசாரணை குழு அமைத்து விசாரித்து முறைகேட்டில் தொடர்புடைய அனை வர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் மானியத்தை மோசடி செய்து முறைகேடாக பெறுவதற்காக 20 சதவீதம் வரை சில அரசு அதி காரிகள் லஞ்சம் பெறுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது: 5 கடைகளுக்கு அபராதம்
திருப்பூர், ஜூன் 11 - திருப்பூர் மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட் களை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்புத்துறை அதி காரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் லட்சுமிநகர் மில்லர் பஸ் ஸ்டாப் அருகில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவ தாக உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி விஜயல லிதாம்பிகை மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் செவ்வாயன்று காலை விஜயலலிதாம்பிகை, ஆய்வாளர் தங்கவேல் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்த னர். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட கூல் லிப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய் யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புகை யிலை பொருட்கள் விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த முக மது பர்கான் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமு தல் செய்யப்பட்டது.
இதுபோல் தென்னம்பாளையம், மும்மூர்த்தி நகர், முரு கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் புகையிலை விற்பனை செய்த மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 5 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1.25 லட்சம்
குரூப் 4 தேர்வில் 35 ஆயிரத்து 592 பேர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டத்தில் 35 ஆயிரத்துக்கு 592 பேர் குரூப் 4 தேர்வுகள் எழுதி னர்.
தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழவதும் குரூப் 4 தேர்வுகள் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத திருப் பூர் மாவட்டத்தில் 45 ஆயி ரத்து 885 பேர் விண்ணப்பித்தி ருந்தனர். இதற்காக மாவட் டத்தில் 9 வட்டங்களில் 155 தேர்வு மையங்களில் காலை 9.30 மணிமுதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற் றது. இதில், 35 ஆயிரத்துக்கு 592 பேர் தேர்வு எழுதினர். இதில், விண்ணப்பித்திருந்த 10 ஆயிரத்து 293 பேர் பல் வேறு காரணங்களால் தேர்வு எழுதவில்லை. முன்னதாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி மாநகராட்சிப் பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் அவர் கூறியதா வது, திருப்பூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுகள் 155 மை யங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வை கண்கா ணிக்க 18 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டி ருந்தன. மேலும், தேர்வுக் கான அனைத்து ஏற்பாடு களை மேற்கொள்ளும் வகை யில் பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் கண் காணிப்பாளர்கள் ஈடுபட்ட னர். இவர்கள் தமிழ்நாடு அர சுப் பணியாளர் தேர்வாணை யத்தின் விதிமுறைக்கு ஏற்ப வினாத்தாள் வழங்குதல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகி யவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப் பட்டதை உறுதி செய்தனர் என்றார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்: 30.92/ 60அடி
நீர்வரத்து: 18 கனஅடி
நீர்திறப்பு: 28கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 49.81 / 90அடி
நீர்வரத்து: 254 கனஅடி
நீர்திறப்பு: 0 கனஅடி