districts

கோடை விடுமுறையின் கடைசி நாள்: இன்று பள்ளி திறப்பு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்

தருமபுரி, ஜூன் 9- ஜூன் 10 ஆம் தேதியன்று (இன்று) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோடை விடு முறையின் கடைசி நாளான ஞாயி றன்று, சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வ ரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்திலும், காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் தமிழக - கர்நாடகா எல்லை பகுதியான  பிலிகுண்டுலு காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி யது. இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நீர்வ ரத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 3000 கனஅடியாக வந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்த தால், ஒகேனக்கல்லுக்கு நீர்வ ரத்து படிபடியாக சரிந்தது.  ஞாயிறன்று காலை நிலவ ரப்படி விநாடிக்கு 1500 கனஅடி யாக குறைந்து காணப்பட்டது. நீர்வ ரத்து குறைந்த போதிலும் ஒகே னக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து கொட்டி யது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரண மாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால் பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்கா ணித்து வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று (இன்று) முதல் பள்ளிகள் திறப்பா லும், கோடை விடுமுறை முடிவதா லும் ஒகேனக்கல்லில் ஞாயிறன்று அதிகளவில் தங்களது குழந்தைக ளுடன் சுற்றுலாப் பயணிகள் குவிந் தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்த னர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், பேருந்து நிலையம், கடைவீதிகள், உணவு விடுதிகளில் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல, சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு மலைப்பகுதிகளிலும், மலைப்பிர தேசமான நீலகிரி மாவட்டத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிறன்று அதிகளவில் காணப் பட்டது.