குடிநீர் தட்டுப்பாடு - ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்ய கோரிக்கை
உடுமலை, ஏப்.5- பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் வழங்கப்படுவதால், உடுமலையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிராமங்களில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளதை தடுக்கும் வகையில் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து, தற் பொழுது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் கடுமை யான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கடந்த மாதம் முதல், தினம் ஒரு பகுதியில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேவைக்கு ஏற்ப குடிநீர் வழங்கப்படுவ தில்லை என்று கூறி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி யும் ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் தர முடியவில்லை. பல கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், அது வரை பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய் கிணறுகளி லிருந்து ஊர் பொதுக்குழாய்களில் குடிநீர் வழங்கப் பட்டது. இதனால், பல கிராமங்களில் ஆழ்குழாய் கிணறு கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் வழங்கப்படுகிறது. இப் பகுதிகளில் புதிய வீட்டுமனைகள் அதிகமானதால் குடிநீர் தேவையும் அதிகமாக உள்ளது. கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. எனவே, ஊராட்சி நிர்வாகம் ஏற்கனவே பயன் பாட்டிலிருந்த ஆழ்குழாய் கிணறுகளை சீர்செய்து பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருந்ததிய மக்களை இழிவுபடுத்திய சீமான் உருவபொம்மை எரித்து போராட்டம்
கோவை, ஏப்.5- அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என்றும், அருந்ததியர் மக்களுக்கு வழங் கப்பட்ட மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட் டிற்கு எதிராகவும், தொடர்ந்து அருந்ததியர் மக்களை இழிவு படுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில் சீமானின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, திராவிட தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் சீமானின் உருவ பொம்மை யை திடீரென எரித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல் துறையினர் போராட்டக்காரர்களிடமிருந்து சீமானின் உருவ பொம்மையை பறித்து எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் அனைவரையும் கைது செய்தனர்.
சட்டவிரோத மது விற்பனை - 13 பேர் கைது
சூலூர், ஏப்.5- சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதை, பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்டு, மது பாட்டில்களை பறிமுதல் செய்து, 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று கோவை மாநகரம் முழுவதும் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். மகாவீர் ஜெயந்தி ஓட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை - சூலூர், கருமத்தம்பட்டி, ராயர்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் சட்ட விரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக அங்குள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர், டாஸ்மாக்கில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மதுபான விற்பனையில் ஈடுபட்ட 6 பேரும் மீதம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல, நீலாம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வரும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோன்று, கோவை மாநகரில் பல இடங்களில் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்றது, இதனையடுத்து போலீசார் குனியமுத்தூர், ரத்தினபுரி, சரவணம்பட்டி, ரேஸ்கோர்ஸ், காட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். இதனையடுத்து போலீசார் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்
தருமபுரி, ஏப்.5- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 11ஆம் தேதியன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள் ளார். தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதியன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் நடைபெறவுள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் உருட்டு - இறந்தவர் உயிரோடு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி
உதகை, ஏப்.5- குன்னூரில் இறந்ததாக கூறி போலீசார் உடலை ஒப்படைத்து, இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்ட நபர், திடீரென உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி ஒட்டிய வனப்பகுதியில் தூக்கிட்டு இறந்த நிலையில், இரண்டு மாத மான ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதனை குன்னூர் வெலிங்டன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத் தினர். அப்போது, குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் சுற்றி திரிந்த எம்ஜிஆர் என்கிற ராஜேந்திரன் நீண்ட காலமாக காணாமல் போனதால் இறந்தது அவர்தான் என நி னைத்து போலீசார் உடலை ராஜேந்திரனின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர் களும், தனியார் அறக்கட்டளையின் ஆதர வோடு அவருக்கான இறுதி சடங்கு செய்து உடலை அடக்கம் செய்தனர். இந்நிலை யில், செவ்வாயன்று திடீரென குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் எம்ஜிஆர் என்ற ராஜேந்திரன் உயிருடன் வந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேரளா சென்று நீண்ட காலம் அங்கேயே தங்கி விட்ட தாக அவர் உறவினர்களிடம் தெரிவித் துள்ளார். நீண்ட காலமாக திரும்பி வராத தால் அவர் என்று நினைத்து வேறு ஒருவரை அடக்கம் செய்துள்ளனர். தூக்கிட்டு இறந்தவர் யார் என்று தெரி யாமல், கோப்புகளை மூடிக்க வேண்டும் என்கிற நிலையில், போலீசார் உடலை மாற்றி ஒப்படைத்த சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா
உதகை, ஏப். 5- கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் பகுதி யில் குடியிருப்பு அருகே உலா வந்த சிறுத்தையின் கண்கா ணிப்பு கேமரா பதிவு குடியிருப்பு வாசிகளை அச்ச மடைய செய்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி சிறுத்தை,கரடி,காட்டு மாடு உள்ளிட்ட வனவி லங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவது தொடர் நிகழ் வாக இருக்கிறது. இந்நிலையில், அடிக்கடி கரடி மட்டும் உலா வரும் அரவேனு அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில், செவ்வாயன்று இரவு சிறுத்தை ஒன்று உலா வந் துள்ளது. இது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில், நீண்ட நேரம் குடியிருப்பிற்கு வெளியே உள்ள சாலையில் உலா வந்த சிறுத்தை, பின்னர் சிறிது நேரம் நோட்டமிட்டுவிட்டு பின்பு வனப்பகுதிக்குள் செல்கிற காட்சி பதிவாகியுள்ளது. சிசிடிவி பதிவினை ஆய்வு செய்த போது இரவு நேரத் தில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்துள்ளது குடி யிருப்பு வாசிகளை பெரும் அச்சமடையசெய்துள்ளது. எனவே வனத்துறையினர் அரவேனு பெரியார் நகர் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முகநூலில் அவதூறு அதிமுக ஐடி விங் செயலாளர் கைது
கோவை, ஏப். 5- திமுக குறித்து முகநூலில் அவதூறு கருத்துக்கள் பரப்பிய தாக கூறி பொள்ளாச்சி நகர அதிமுக தொழில்நுட்ப பிரிவு செய லாளர் அருண்குமார் என்பவரை காட்பாடியில் இருந்து வந்த போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு மேற்கு காவல் நிலையம் பின்புறம் வசிப்பவர் அருண்குமார். இவர் பொள்ளாச்சி நகர அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். இவர், முகநூலில் திமுக செயல்பாடுகளையும், அரசியல் வாதி களையும் நிர்வாகிகள் குறித்து பதிவிட்டு வருவார். இந்நிலையில் சமீபத்தில் அமைச்சர் துரைமுருகன் குறித்து , நீ போன இடம் பெரிய இடம் பெரிய இடம் புன்னிய வான் வாழும் இடம் என்று பின்னணி பாடலுடன் இங்கே கோ பாலபுரம் கொத்தடிமை உறங்குகிறான் என சுடுகாட்டில் அமைந்துள்ள சமாதி போல் சித்தரித்து ஒரு பதிவை வெளி யிட்டு இருந்தார். இதனையடுத்து, அருண்குமார் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்புவதாக கூறி வேலூர் மாவட்டம் காட்பாடியில் துரைமுருகன் ஆதரவாளர் ஒருவர் அளித்த புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில், காட்பாடி போலீசார் அருண்குமாரை அவரது வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டார். இது,பொள்ளாச்சி நகர அதிமுகவி னரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஆள் இல்லாத வீட்டில் திருட்டு கொள்ளையன் கைது
அன்னூர், ஏப்.5- கோவை அருகில் தனியாக உள்ள வீடுகளில் பகலிலே கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய் துள்ளனர். கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள செங்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 13ஆம் தேதியன்று குடும்பத்தினருடன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரூ.2.50 லட்சம் ரொக்கம், 3 பவுன் தங்க நகைகள் மற்றும் லேப்டாப் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுப்பிரமணியன் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீ சார், தனிப்படை அமைத்து இந்த கொள்ளை குறித்து விசா ரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் புதனன்று அன் னூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் பசூர் பகு தியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர் ஒரு வரை தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை மேற் கொண்ட போது, அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் முபாரக் அலி (27) என்பதும், இவர் தனது நண்பர் சுபாஷ் என்பவருடன் இணைந்து சுப்பிரமணியன் வீட் டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதே போன்று கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்க ளில் முபாரக் அலி மீது 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு கள் பதிவாகியுள்ளது. இவர்கள், தனியாக உள்ள வீடுகளை குறி வைத்து பகல் நேரங்களில் மட்டுமே கொள்ளை சம்ப வத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதனையடுத்து, முபாரக் அலியினை அன்னூர் நீதிமன்றத்தின் முன் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வால்பாறையில் காட்டுப்பன்றிகள் திடீர் சாவு
கோவை, ஏப்.5- வால்பாறையில் 20 காட்டுப்பன்றி கள் திடீரென இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் அச்சத்தை ஏற்படுத் திவுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகளவிலான காட்டுப் பன்றிகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் வந்தன. இதனால் வேலைக்கு சென்று வரக்கூடிய பொது மக்கள், பெண்கள், மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், வால்பாறை நகர் பகுதி யான கக்கன்காலனி, எம்ஜிஆர் நகர், வாழைத் தோட்டம் ஆகிய இடங்களில் நடமாடி வந்த 20க்கும் மேற்பட்ட காட் டுப் பன்றிகள் கடந்த 2 நாட்களில் ஆங் காங்கே இறந்து கிடந்தன. இதுகுறித்து அறிந்த வால்பாறை வனத்துறையினர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் உத வியுடன் இறந்து கிடந்த காட்டுப் பன்றிக ளின் உடலை எடுத்து புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறு கையில், வால்பாறை பகுதியில் வழக் கத்திற்கு மாறாக தற்போது கோடை காலத்தில் கனமழை பெய்து வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக காட்டு பன்றிகள் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் காட் டுப்பன்றிகள் ஆங்காங்கே இறந்து கிடப் பது பொது மக்கள் மத்தியில் பெரும் அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், காட்டுபன்றிகளுக்கு ஏதாவது தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறதா, இதன் மூலம் பொது மக்களுக்கு ஏதாவது தொற்று நோய்கள் பரவிவிடுமோ என தெரிவித்தனர். மேலும், வனத்துறையின் உயர் அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இறந்து கிடக்கும் காட்டுப்பன்றிகள் உடலை கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து உடல் பாகங்களை ஆய்வக பரிசோத னைக்கு அனுப்பி காரணத்தை கண்ட றிய வேண்டும் என்றனர்.
கருணை அடிப்படையில் இருவருக்கு அரசு வேலை
ஈரோடு, ஏப்.5- ஈரோடு மாவட்டத்தில் இருவருக்கு கருணை அடிப்படை யில், மாவட்ட ஆட்சியர் அரசு பணி நியமன ஆணையினை வழங்கினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சென்னிமலை கிராம உதவியாளர் எஸ்.முருகேசன் பணி நேரத்தில் காலமா னார். அவரது மகன் அருள்குமாருக்கு மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நஞ்சை கிளாம் பாடி கிராம நிர்வாக அலுவலராக பணி நியமன ஆணையினை வழங்கினார். இதேபோல அந்தியூர் வட்டம், பர்கூர் கிராம உதவியாள ராகப் பணியாற்றி வந்த சின்னசாமி பணியிடையில் காலமா னதைத் தொடர்ந்து அவரது மகன் கோவிந்தராஜுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் நியமன ஆணையினை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ச. சந்தோஷினி சந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் சுகாதாரத்துறை வலியுறுத்தல்
கோவை, ஏப்.5- கொரோனா பரவலை கட்டுப்ப டுத்த, பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. இதையடுத்து, சுகா தாரத்துறையின் சார்பில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த வாரத் தில் 15 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தற் போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10க்கு கீழ் வந்துள்ளது. கொரோனா கார ணமாக தற்போது 90 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் பாதிப்பை கட்டுப்படுத் தும் வகையில் மருத்துவமனைகள், தியேட்டர், வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகா ரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறு கையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளு டன் வரும் நோயாளிகள் மருத்துவம னைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. தற்போது சிகிச்சை யில் உள்ளவர்களில் 90 சதவிகிதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள னர். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தனிச்சையாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மேலும், மருத்துவமனைகள், வணிக வளாகம், தியேட்டர், பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதனால், கொரோனா பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்தாத நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என் றார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
அமராவதி அணை நீர்மட்டம்:54.01/90அடி.நீர்வரத்து:719கனஅடிவெளியேற்றம்:15கன அடி
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.04/60அடி நீர்வரத்து:570கன அடி
வெளியேற்றம்:1124கனஅடி
பேரழிவு திட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்
திருப்பூர், ஏப்.5- தமிழகத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், மாநில பொதுc செயலாளர் எஸ்.முத்துவிஸ்வநாதன் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒன்றிய அரசு தமிழகத்தில் வடசேரி, சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி ஆகிய 5 இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான ஏலத்தை நடத்தியுள்ளது. கடலூர் மாவட் டம், நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள 3 நிலக்கரி சுரங்கங் கள் இல்லாமல், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சுரங்கங்களுக் காக 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள் ளன. காவிரி டெல்டாவை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான திட்டங்களை நிலக்கரி எடுப்பு திட்டங்கள் என்ற பெயரில் ஒன் றிய அரசு அறிவித்துள்ளது. காவிரி டெல்டாவுக்கு 4 சுரங்கங்க ளையும், காவிரி டெல்டாவை ஒட்டிய பகுதியில் ஒரு சுரங்கம் என 5 சுரங்கங்களை அமைப்பதற்காக செய்துள்ள அறிவிப்பு தமிழக மக்களை பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமி ழக அரசால் அறிவிக்கப்பட்ட தஞ்சையில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முன்வருவது மாநில அரசின் சட்டங் களை மதிக்காத செயலாகும். ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை அறிவித்தாலும் நிலம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத் தின் படி மாநில அரசினுடைய துறையாக உள்ளது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த இய லாது. நிலம் என்பது மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் வரக் கூடிய துறையாக இருப்பதால், இது போன்ற பேரழிவு திட்டங் களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது என்று முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யிருக்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் நடப்பு சட்டப்பேரவை கூட்ட தொடரில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்காது என்றும், திட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.