கோவை, ஜூன் 26- தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி யினை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கிவைத்தார். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, தென்னமநல்லூர் ஊராட்சி, மீன்தொட்டி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மரக்கன் றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், தென்னமநல் லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுசாமி, துணைத் தலைவர் மலர் கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, கலாராணி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இதுகுறித்து ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதா வது, கோவை மாவட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுதல் பணிக்கு சென்னை, ஊரக வளர்ச்சி இயக்குநரால், 1,27,420 குறியீடு நிர்ண யம் செய்து வரப்பெற்றுள்ளது. அதில் 2024-25 ஆம் நிதியாண்டில் இதுவரை 39,477 மரக்கன்றுகள் பொது திறந்த வெளிப்பகுதி, சாலையோரம் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் நடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில், உலக சுற்றுச்சூழல் வாரத்தினை முன் னிட்டு 5,382 மரக்கன்றுகள் நடவு செய் யப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாவட்டத்தில், 228 ஊராட்சிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய் யப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப் பட்டுள்ளது.