districts

img

ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு

ஈரோடு, டிச.13- ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும்  தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறி வித்துள்ளனர்.  ஈரோடு மாநகராட்சி 60 வார்டுக ளைக் கொண்டது. இங்கு நாள்தோறும்  சுமார் 75 டன் குப்பைகள் சேகரிக்கப்படு கின்றன. இவற்றினை மக்கும் குப்பை கள், மக்காத குப்பைகள் என தனித்த னியாக பிரித்து தூய்மைப் பணியா ளர்கள் பெறுகின்றனர். இவ்வாறு பொது  சுகாதாரப்பிரிவில் பணி நிரந்தரம் செய் யப்பட்ட தொழிலாளர்களும், நிரந்தரப் படுத்தப்படாத தினக்கூலி தொழிலா ளர்கள் கணிசமானோர் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சியில் நிரந்த ரப்படுத்தப்படாத தினக்கூலி அடிப்ப டையில் சுயஉதவிக்குழு மூலம் பணி யாற்றும் பொது சுகாதாரப்பிரிவு தொழி லாளர்களுக்கு அரசாணைப்படி ஊதி யம் பெற்று வந்தனர். இந்நிலையில் பொது சுகாதாரப்பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விட மாந கராட்சி முடிவு செய்தது. அதன்படி ஒப் பந்தம் பெற்ற தனியார் நிறுவனம்  பொறுப்பேற்கவில்லை. இதனால்  கடந்த 3 மாதங்களாக நிரந்தரப்படுத்தப் படாத தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியமான ரூ.707 ஐவிட குறைவாக ரூ.687 என ஊ தியம் வழங்கப்படுகிறது. கடந்த 3  மாதங்களாக மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஊதி யம் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஊதியம் நிர்ணயம் செய்வ தற்கு அடிப்படையாக தமிழ் நாடு தொழிலாளர் வேலை  வாய்ப்பு மற்றும் திறன்  மேம்பாட்டுத்துறை வெளி யிட்டுள்ள குறைந்தபட்ச ஊதி யம் குறித்த அரசாணை அடிப் படையாக கொள்ளப்படு கிறது. இவ்வாறு அடிப்படை யாகக் கொள்ளும் அரசா ணையை சென்னை உயர்நீதிமன் றம் தடை செய்துள்ளது. தொடர்ந்து வழக்கு நடைபெறும் நிலை யில், நீதிமன்றம் தடை செய்த அரசா ணையை அடிப்படையாகக் கொண்டு ஊதிய நிர்ணயம் கூடாது. அதேசமயம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள  அரசாணையின்படி ஊதியம் நிர்ண யம் செய்யப்பட வேண்டும். மாநக ராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் இதனை வலியு றுத்தி எழுத்துப்பூர்வமான கடிதத்தை கொடுத்துள்ளனர்.

ஆயினும் மாமன்ற கூட்டத்தில் உயர்நீதிமன்றம் தடை செய்த அரசாணையின் அடிப்ப டையிலேயே ஊதியம் நிர்ணயிக் கப்பட்டது. மேலும், மேற்படி அரசா ணையை தடை செய்ததுடன் அடுத்த உத்தரவு வரும்வரை அரசாணை (2டி) 62 /11.10.2017ன்படி ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத னால் தூய்மைப் பணி செய்யும் நிரந் தரப்படுத்தப்படாத தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கபபட்டுள்ளனர். எனவே, சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பினர் குறைந்தபட்ச கூலி சட்டப் படியோ, மாவட்ட ஆட்சியரின் செயல் முறை ஆணைகள் படியோ ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கை நிறை வேறாத நிலையில், டிச.29 ஆம் தேதி  முதல் வேலை நிறுத்தப் போராட்டம்  நடைபெற உள்ளதாக தொழிற்சங்கங் கள் அறிவித்துள்ளன. முனனதாக, இதுகுறித்து விவா திக்க அனைத்து தொழிற்சங்க ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தின்படி வேலை நிறுத்தம் செய்வது,  சட்டப்படியான கூலி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் சிஐடியு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமையில் அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்ட மைப்பினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.