districts

ஏரியில் கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

தருமபுரி, டிச.29- செட்டிக்கரை ரெட்டேரியில் நக ராட்சியின் கழிவுநீர் கலப்பதால் விவ சாயம், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்டது செட்டிகரை ஊராட்சி.  இங்கு ரெட்டேரி, சுமார் 25 ஏக்கர்  பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியின் மூலம் செட்டிகரை, காந்திபாளை யம், மதிகோண்பாளையம், குப்பூர், ராஜாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்க ளுக்கு சுமார் 200 ஏக்கர் விவசாய பாசனத்திற்க்கு ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், தருமபுரி நகராட்சி,  கடந்த 2010 ஆம் ஆண்டு ரூ.32 கோடி யில், பாதாள சாக்கடை கழிவுநீர் திட் டத்தை நடைமுறைப்படுத்தியது. நக ராட்சியில் இருந்து தினமும் வெளியே றும் 38 இலட்சம் கழிவுநீரை சுத்திக ரிக்க, நகராட்சி அருகே உள்ள காந்தி பாளையம் ரெட்டேரி அருகே, தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், ரூ 3.79 கோடியில், பாதாள சாக்கடை திட்டத்திற்கான  கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கப்பட்டது.  தருமபுரி நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்தி கரிக்க, ரெட்டேரி ஏரியின் அடியில்  ராட்சத குழாய் மூலம், சுத்திகரிப்பு  நிலையத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது. தற்போது நகராட்சியின் கழிவுநீர் குழாய் ஏரியில் உடைந்து  சேதமடைந்துள்ளது. இதனால் பெரும் பகுதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத் திற்கு செல்லும் முன், ஏரியிலேயே கலந்து வீடுகிறது. இதனால்  ஏரியில்  உள்ள சுத்தமான தண்ணீரும், கழிவு நீருடன் சேர்ந்து மாசடைந்துள்ளது. ஏரியில் கழிவுநீர் கலந்து விடுவதால்  மாசு ஏற்பட்டு விவசாயத்திற்கு பயன் படுத்த முடியாத நிலை உள்ளது.  மேலும், அதிகம் மழைபெய்து ஏரி யில் இருந்து வெளியேற்றப்படும் தண் ணீர், விவசாய பயிர்களுக்குள் பாய்ந்து பயிர்கள் நோய்வாய்படுகிறது. கோடைக்காலங்களில் ஏரியின் தண்ணீரை கால்நடைகள் பருகுவது  வழக்கம், சில ஆண்டுகளாக பருக முடி யவில்லை. ஏரியில் தண்ணீர் இருப் பதால் தற்போது ஏரியை கடந்து காந் திபாளையத்திற்க்கு செல்ல முடிய வில்லை. ஏரியிலிருந்து கொசு, ஈ போன்ற பூச்சிகள் பரவி துர்நாற்றம் வீசுகிறது. இந்த சுத்திகரிப்பு நிலை யத்தில் பெயரளவில்,  கழிவுநீரை சுத் திகரிக்கப்பட்டு, விவசாயத்திற்கு தண் ணீர் விடுகிறோம் என்று பெயரில், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரையே மீண்டும் ஏரியில் விடும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. அப் பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஏரியில் கழிவுநீர் கலப்பது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதை  தடுத்து விவசாயத்தையும், அங்குள்ள பொதுமக்களின் சுகாதாரத்தை பாது காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.