districts

img

சாலையோரம் வீசப்படும் மருத்துவக்கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு

தருமபுரி, பிப்.1- தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகளை தருமபுரி நகரப்பகுதி மற்றும் சாலை யோரம் வீசி எரிப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படு வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனை கள் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குப் பிறகு, வெளியேற்றப்படும் மருத்துவக்கழிவுப் பொருட்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் அகற்றப் படும் விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்பு களும், நுண்ணுயிர் கிருமிகள் கலந்த கழிவுகளும், காலாவதியாகும் மருந்துப் பொருட்களும் கழிவு கள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. ட்ரீட்மெண்ட் பிளாண்ட்டுகளில் இவைகளை “இன்சினரேட்டர்’, “மைக்ரோவேவ்ஸ்’ போன்ற எரிப்பான்கள் மூலம்  உயர் வெப்பநிலையில் எரித்தல் போன்ற முறை களைக் கையாண்டு மருத்துவக்கழிவுகள் அழிக்க  வேண்டும் என சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ள தென மருந்தாளுநர்கள் தெரிவிக்கின்றனர். அதா வது மருத்துவமனையில் நோயாளிகள் பயன்ப டுத்தித் தூக்கி எரியும் பொருட்கள் மிகவும் அபாய கரமானவை. இவை ‘பயோ மெடிக்கல்’ கழிவுகள்  என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாறு வெளியே றும் கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆனால், கூர்மையான பொருட்கள், ரத் தம், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள், உடல் பாகங்கள், ஊசிகள், இன்ஜக்சன் பாட்டில் கள், மருத்துவர்கள் பயன்படுத்தும் கையுறைகள் ஆகிய மருத்துவம் சார்ந்த கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் விலங் குகளுக்கும், மனிதர்களுக்கும் நோய்த்தொற்று ஏற் படுவது மட்டுமல்ல, கூர்மையான பொருட்களால் ஆபத்தை ஏற்படுத்துகிறது என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.

சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படி பயோ மெடிக்கல் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016  ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அதன்  அடிப்படையில் மருத்துவக்கழிவுகளை தரம் பிரித்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றும் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்காக சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு என நான்கு நிறங் களில் நான்கு குப்பைத்தொட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்டன. ஆனால், தருமபுரி நகரப் பகுதி யில் உள்ள ஏராளமான தனியார் மருத்துவமனை கள் இதை பின்பற்றுவதில்லை. தருமபுரியில்  பெரும்பாலான மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையுடன் கூடிய மருத்துவமனைக ளாக இருந்து வருகிறது. இங்கிருந்து வெளி யேற்றப்படும் மருத்துவக்கழிவுகளை பாதுகாப் பான முறையில் அளிப்பதற்கு பதிலாக, மூட்டை களாக கட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்களி டம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். இந்த கழிவு களின் விபரீதம் தெரியாமல் தருமபுரி பச்சையம் மன் கோவிலுக்கும், அருகிலுள்ள சடலங்களை எரிக்கும் எரிமேடை தகன கட்டிடத்திற்கும் இடை யில் உள்ள காம்பவுண்ட் சுவரை ஒட்டிய பகுதி யில் அவைகளை கொட்டி தீ வைத்து எரித்து வரு கின்றனர். உயர்மின் எரிக்கலன்களில் பாதுகாப் பாக எரிக்கக்கூடிய மருத்துவக்கழிவுகளை அங்கு  கொட்டி தீ வைத்து எரிப்பதால் வெளியேறும் ஒரு வித துர்நாற்றம் நேதாஜி நெஞ்சாலையில் செல் லும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை மூச்சுத் திணற வைக்கிறது. மேலும், பச்சையம்மன் கோயிலுக்கு எதிரே  பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக் கும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி  இயங்கி வருகிறது. இந்த பள்ளி மாணவர்களுக்கு  நோய் தொற்று பரவும் அபாயத்தை தனியார்  மருத்துவமனையின் கழிவுகள் உருவாக்கி வருகி றது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், பாதுகாப்பான முறையில் எரிக்கப்பட வேண் டிய மருத்துவ கழிவுகளை, தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மனிதர்களின் உயி ருக்கு பாதுகாப்பின்றி நகரத்தின் முக்கிய பகுதி களில் கொட்டி எரித்து நோய் தொற்றை உருவாக்கி வருகின்றன. இது பல்லாயிரம் பொதுமக்களை கொரோனா வைரஸ் கிருமி போல் பாதிப்பை ஏற் படுத்தும். பணத்திற்காக மனித உயிரை நேசிக்கா மல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மருத்துவமனைகள் மீது மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.