தருமபுரி, ஜன.3- ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 90க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. அனைத்துக் கிராமங்களிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப் பகுதி களில் தூய்மைப் பணியாளர்கள் நாள் றும் குப்பைகளை சேகரிக்கின்றனர். ஆனால், பல்வேறு கிராம ஊராட்சிக ளில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி கள் நடைபெறுவதில்லை. மாறாக பொது இடங்களிலும், ஏரிகள், ஆறுகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலை களிலும் குப்பைகள் கொட்டப்படுகின் றன. பல்வேறு இடங்களில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இத னால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், மூச்சுத்திணறல், தொற்று நோய்கள் பர வும் அபாய நிலை நிலவுகிறது. மேலும், ஆறுகள், ஏரிகளில் நெகிழிப் பொருட் கள், குப்பைகளைக் கொட்டுவதால் நீர் நிலைகள் மாசு அடையும் நிலையுள் ளது. எனவே, கிராமப் பகுதிகளில் சேக ரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப் பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும், மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.