மேயர், ஆணையர் ஆய்வு சேலம், ஜூன் 19- முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணா நிதி நூற்றாண்டு மாநகரப் பேருந்து நிலை யத்தில், தரை தளம் மற்றும் முதல் தளத்தி லிருந்து முதல் முழுமையான அளவில் பேருந்துகள் இயக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்து மேயர் மாநக ராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேலம் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் ரூ.96.53 கோடி மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் திறந்து வைத்த அடுத்த நாளே, பேருந்துகள் உள்ளே அனு மதிக்காமல் மீண்டும் பூட்டப்பட்டது. இது குறித்து தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி பிரசுரிக்கப்பட்டது.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன். ஆணையாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட நேரில் ஆய்வு செய்தனர். இதில், பயணிகளுக்கு குடிநீர் வசதி, ஆண்கள் மற் றும் பெண்களுக்கு தனி தனியாக அமைக் கப்பட்டுள்ள கழிப்பறை வசதி, மின் விளக்கு வசதி, சுகாதார வசதி, மின் தூக்கி வசதி, பய ணிகள் அமருவதற்கான இருக்கை வசதி, பயணிகளுக்கு பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்தல், காவலர் களுக்கு தனி அறை, நேரம் காப்பாளர் அறை, போக்குவரத்து கழக அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் மேற்கொள்ளப்பட வேண் டிய அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். தரை தளத்திலிருந்து பேருந்து நிலை யத்திற்கு வருகின்ற பேருந்துகள், முதல் தளத் திற்கு வரும் பேருந்துகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கும் வகையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஒலிப்பெருக்கி மூலம் அறி விப்பு செய்யப்படுகிறதா, பேருந்து நிலை யத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு பேருந் துகள் குறைவான வேகத்தில் இயக்கப்படு கிறதா, தரை தளம் மற்றும் முதல் தளத்தில் எந்ததெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக் கப்படுகிறது என்பதை குறித்த பெயர் பலகை கள் உள்ளதா என்பது போன்ற பணிகளை ஆய்வு செய்தனர். தரைதளத்தில் குருசாமிபாளையம், மகு டஞ்சாவடி, வைகுந்தம், ராசிபுரம், பாரப் பட்டி, மல்லசமுத்திரம், அன்னதானப்பட்டி, மல்லூர், ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டினம், அக்கரைப்பட்டி, பேளூர், கன்னங்குறிச்சி, அடிவாரம் ஆகிய ஊர்களுக்கும், முதல் தளத்தில் இளம் பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, ஜல கண்டாபுரம், ஜங்சன், தாரமங்கலம், நங்க வள்ளி, வனவாசி, வெள்ளாளப்பட்டி, தின்னப் பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர், முத்துநாயக் கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.