சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அதன் இணைவு பெற்ற அனைத்து அரசு கலைக்கல்லூரிகளுக்கும் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ரன், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் நவீன் உட்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.