சேலம், மார்ச் 17- தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிக ளிலேயே அதிக எண்ணிக்கையில் சுகப்பிரசவம் செய்து, சேலம் மாநக ராட்சி சாதனை படைத்துள்ளது. சேலம் மாநகராட்சியில் தற்போது 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சராசரியாக மாதம் 120 முதல் 140 சுகப்பிரசவங்கள் நடை பெறுகின்றன. ஆண்டுக்கு மொத்தம் 1,200 முதல் 1,300 சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலை யில், கொண்டலாம்பட்டி மண்டலத் தில் உள்ள தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி ஒரே நாளில் 6 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெற்றது. இவற்றில் மூன்று பெண் குழந்தைகளும், மூன்று ஆண் குழந் தைகளும் பிறந்தன. தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத் தில் பிரசவித்த தாய்மார்களுக்கு தாய், சேய் நலப் பெட்டகம் வழங்கப்பட்டது. தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையத்தில் தொடர்ந்து மாநி லத்திலேயே அதிக சுகப்பிரசவம் நடந்து வருகிறது. இதை வெகுவா கப் பாராட்டிய மாநகராட்சி மேயர் ஆ. ராமச்சந்திரன், ஆணையர் சீ.பாலசந் தர் ஆகியோர், தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்குமாறு மருத்துவர் களுக்கு அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சி யில், மாநகர நல அலுவலர் ந.யோகா னந்த், மண்டல குழுத்தலைவா் அசோ கன், மருத்துவ அலுவலர் செந்தா கிருஷ்ணா, மாமன்ற உறுப்பினா்கள் பழனிசாமி, எஸ்.ஷாதாஜ், கனிமொழி, வரதராஜ் மற்றும் செவிலியர்கள் பங் கேற்றனர்.