districts

img

சேலம் மெட்ரோ ரயில் சேவை திட்டம் என்னானது?

அதிநவீனத்தை நோக்கி தற் போது உலக நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன. பொது மக்களையும் அந்த வேகத்தில் இணைத்து, கொண்டு செல்வதற்காக அனைத்து  சேவைகளிலும் அதிவேகம் என்பது வந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தற் போது அறிமுகமாக ஏஐ (Artificial Intelligence - AI) அனைத்து தொழில்நுட் பங்களின் சேவைகளை அதிவேகப்படுத்தி யுள்ளது. இதனிடையே, பொதுமக்களின்  பயண காலத்தை குறைப்பதற்காக பல்வேறு நாடுகள் அதிவேக ரயில்களின் இயக்கதிற்கு சென்று கொண்டிருக்கின்றன.  அந்தவகையில் இந்தியாவில் தற்போது தான் மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படுத்த துவங்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு அன் றைய ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந் தியாவில் 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளன, என்றார். அதில் ஒன்று தமிழ்நாட் டின் தலைநகரான சென்னை. சென்னையில் ஏற்கனவே 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப் பட்டு வருகின்றன. இரண்டாம் கட்ட திட்டத் தில் மேலும் 3 வழித்தடங்களில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்கான, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின் றன.

சேலத்தில் மெட்ரோ ரயில்

இதனிடையே, இரண்டாம் கட்ட நகரங் களான மதுரை, கோவை ஆகியவற்றில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு கள் ஆய்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. இதனிடையே, 2019 நாடாளுமன்ற தேர்தலில் சேலம் மக்க ளவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சேலத்தில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப் படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இத்திட் டத்தை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வந்தார். இதனைத்தொடர்ந்து, சேலம் மற்றும் திருச்சியிலும் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டது. சேலத்தை பொறுத்த வரை 2 வழித்தடங்களில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதற்காக சாத்தியக்கூ றுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். எதற்காக சேலத்தில் மெட்ரோ? தமிழ்நாட்டில் ஐந்தாவது பெரிய மாநகராட் சியாக சேலம் உள்ளது. சேலம் மாநகராட்சி 91.36 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 10 லட்சத் திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டுள் ளது. சேலம் மாநகருக்கு தினசரி அருகில் இருக் கும் பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநி லங்களில் இருந்தும் ஏராளமான பொது மக்கள் வந்து செல்லும் மாநகராக திகழ்கி றது. இதேபோன்று, சேலம் நகரில் கதர், வெண்பட்டு தொழில், ஜவ்வரிசி உற்பத்தி, வெள்ளிக்கொலுசு மற்றும் சேலம் இரும் பாலை போன்ற முக்கிய வர்த்தகத்தில் முன் னோடியாக விளங்கி வருகிறது. சேலம் மாந கர் பகுதியில் அமைந்துள்ள மொத்தம் சாலை கள் 1037.17 கிலோமீட்டர் நீளம் மாநகராட்சி பரா மரிப்பில் உள்ளது. மற்ற சாலைகள் நெடுஞ்சா லைத்துறையின் கீழ் உள்ளது. எனவே, சேலத் தில் மெட்ரோ ரயில் சேவை இயக்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சேலத் தில் இரண்டு வழித்தடங்களில் இயக்குவது குறித்து திட்ட அறிக்கையை மாநில அரசிட மும், ஒன்றிய அரசிடமும் மெட்ரோ ரயில் நிர்வா கம் சமர்ப்பித்துள்ளது.

வழித்தடம்

சேலத்தில் இரண்டு வழித்தடங்களில் 19 ரயில் நிலையங்களுடன் சுமார் 35.19 கிலோ மீட் டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கருப்பூர் முதல் நாழிக்கல்பட்டி வரை ஒரு வழித்தட மும், அயோத்தியாபட்டினம் முதல் உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில் வரை இரண்டாவது வழித்தடமும் முன்மொழி யப்பட்டுள்ளது. மொத்தம் 35.19 கிலோமீட்டர் தொலைவிற்கு கருப்பூர் முதல் சேலம் ரயில் நிலையம் வழியாக நாழிக்கல்பட்டி வரை 18.30 மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. மேலும், கரபுரநாதர் கோவில் முதல் அயோத்திபட்டி ணம் ரயில் நிலையம் வரை அம்மாபேட்டை வழி யாக 17.16 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பூரிலிருந்து மாமாங்கம், ஜங்ஷன், சத்திரம், நான்கு ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், குகை, தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி வரை இயக்கப்படுவது குறித்து முதற்கட்டமாக ஆய்வு செய்யப்பட்டது.

நிதி அறிவிப்பே இல்லை!

தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிக ளுக்கு இன்னும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேயில்லை. தற்போது வரை மாநில அரசின் நிதியை வைத்து அங்கு மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில், கோவை, மதுரை மற்றும் சேலத்திலும் மெட்ரோ அமைப்பதற் கான சாத்தியக்கூறு அறிக்கைகள் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்திற்கு நிதி வழங்கும் பன்னாட்டு ஆசிய வங்கி பிரதிநிதிகள், கடந்த ஜூலை மாதம் மதுரையிலும், அதனைத்தொ டர்ந்து கோவையிலும் மெட்ரோ அமைக்கப் பட உள்ள இடங்களில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்துவிட்டனர். தற்போது சேலத்தில் மெட்ரோ ரயில் இயக் கப்படும் வழித்தடங்களில் மெட்ரோ ரயில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்த வருகை தர உள்ள னர். இந்நிலையில், திங்க ளன்று (ஜூலை 22 ஆம் தேதி) துவங்கிய மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொட ரில், ஒன்றிய பட்ஜெட் செவ்வா யன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ திட்டங்க ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. ஏன்! பட்ஜெட்டில் தமிழ் நாடு என்ற ஒரு வார்த்தைக்கூட இல்லை. இதனிடையே, 3 ஆவது முறையாக ஆட்சியை பிடித்துவிட்டோம் என்று மார்தட் டும் பாஜக பரிவாரங்கள், ‘கூட்டணி (தெலுங் குதேசம், ஐக்கிய ஜனதா தளம்) தயவில் தான் அதிகாரத்தில் உள்ளோம் என்பதை மறந்து விட்டார்கள்’ என்று நாம் சொல்லிக் கொண்டி ருந்தோம். ஆனால், நாங்கள் (பாஜக) மறக் கவில்லை என்பதை கூட்டணி கட்களுக்கு சொல்லும் விதமாக பீகாருக்கும், ஆந்திரா விற்கும் பட்ஜெட்டில் தாராளம் காட்டியுள்ளார் ஒன்றிய பாஜக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தங்களுக்கு ஆதரவான கட்சிகள் உள்ள மற்றும் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் தாராளம் காட்டி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கும் பாஜக வின் செயல், நாடாளுமன்ற தேர்தலில் மக்க ளால் படுதோல்வியடையச்செய்த பின்னரும் தொடர்கிறது. அனைத்து மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என அரசி யல் கட்சிகளும், பொருளாதார பேராசிரி யர்களும், அறிஞர்களும் வலியுறுத்திய பின்ன ரும், ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. தற்போது ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், ஆந்திரா, பீகார் பட்ஜெட்தான் இது. மற்றவர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு அல்வா சாப்பிடத்தான் வேண்டும் என திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் மிகச்சரியா கவே சாடியுள்ளார்.

எப்போது தொடங்கும்? எப்போது முடியும்?

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; மெட்ரோ பணிகள் தொடங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த சேலம், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு, ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை பெரும் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் எப்போது துவங் கும் என்றும் எப்போது முடியும் என்றும் தெரியா மல் மக்கள் விழிபிதுங்கியுள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடர், வெள்ள நிவா ரணத்திற்கே நிதி ஒதுக்காத, மோடி அரசின் ஒன்றிய பட்ஜெட் மக்களின் போராட்டங்கள் மூலமே பணியவைக்க முடியும். தமிழ்நாடு இதற்கு தயாராகும். -விளாடிமிர் பீட்டர்