நாமக்கல், பிப்.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், எலச்சிபாளையத்தில் சேலம் சிறை தியாகி கள் நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக் கப்பட்டது. தமிழ்நாட்டின் ஜாலியன் வாலாபாக் படு கொலையாக கருதப்படும், சேலம் சிறை தியாகிகளின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு அலு வலகத்தில், சிறை தியாகிகள் நினைவு தின கொடியேற்றும் நிகழ்ச்சி கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலை மையில் நடைபெற்றது. மூத்த தோழர் சி.சுந்த ரம் கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டுசாமி, ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.