சேலம், செப்.3- சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சி செப்.6 ஆம் தேதி யன்று துவங்கப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, தமிழ்நாடு அரசின் மக் கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகை யில், செய்தி மக்கள் தொடர்புத்துறை யின் சார்பில் பொழுதுபோக்கு அம் சங்களுடன் கூடிய அரசுப் பொருட் காட்சி பல்வேறு மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரு கின்றன. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் அரசுப்பொருட்காட்சி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதா னத்தில் செப்.6 ஆம் தேதியன்று முதல் துவங்கவுள்ளது. மாநில அமைச்சர் கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநா தன் ஆகியோர் அரசு பொருட்காட்சி யைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள் ளனர். இப்பொருட்காட்சியில், நக ராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, செய்தி மக் கள் தொடர்புத் துறை, வேளாண் - உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம், ஆவின், சேலம் மாநக ராட்சி உள்ளிட்ட 6 அரசு நிறுவனங் கள் என மொத்தம் 33 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இவ்வரங்குகளில் தமிழ்நாடு அர சால் செயல்படுத்தப்பட்டு வரும் பல் வேறு திட்டங்கள் குறித்தும், அவற் றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைத் துறை, மக ளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி இதில் இடம் பெறவுள்ளது. நாள்தோறும் மாலை யில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்பொருட் காட்சி 45 நாட்கள் தொடர்ந்து நடை பெறவுள்ளதென தெரிவிக்கப்பட் டுள்ளது.