சேலம், நவ. 4- அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் சேலம் மாவட்ட எடப்பாடி தாலுகா வின் முதல் செயலாளர் தோழர் பி.லட்சுமி அம்மாள் (வயது 87) வயது மூப்பின் காரணமாக ஞாயிறன்று காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் எடப்பாடி தாலுகா முன்னாள் செயலாளர் மறைந்த தோழர் பி.பழனி சாமியின் இணையர் தோழர் பி.லட்சுமி அம்மாள். இவர் 1980 களில் எடப்பாடி தாலுக்காவில் ஜனநாயக மாதர்சங்க அமைப்பு பேரவை நடத்தி அதன் முதல் தாலுகா செயலாள ராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய மாதர்சங்க மாநிலச் செயலாளர் தோழர் பாப்பா உமாநாத் உள்ளிட்ட தலைவர் களை வரவழைத்து தாலுகாவில் பல்வேறுகூட்டங்களை நடத்தியவர். இவருக்கு, பி.ஜீவானந்தம், பி.முருகன் என்ற இரண்டு மகன்களும் பி.இராணி, பி.விஜயா என்ற மகள்க ளும் உள்ளனர். இவர்களனைவரும் கட்சியின் ஆதரவா ளர்கள். இந்நிலையில், லட்சுமி அம்மாள் வயது மூப்பின் காரணமாக ஞாயிறன்று காலமானார். இவரின் மறைவு செய்தி அறிந்து, சிபிஎம் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் சி.உதய குமார் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்ன தாக, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் டி. இரவீந்திரன் தொலைபேசிமூலம் ஜீவானந்தத்தை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.