சேலம், டிச. 3 - சேலம் மத்திய பேருந்து நிலையம் வெள்ளக்காடாக மாறியது, இதன்காரண மாக வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர். சேலத்தில் மையப் பகுதியில் அமைந் துள்ள டாக்டர் எம்ஜிஆர் மத்திய பேருந்து நிலையம் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல் லும் முக்கிய இடமாக உள்ளது. நாள்தோ றும் லட்சத்திற்கும் அதிகமான பேருந்து பய ணிகள் இந்த பேருந்து நிலையத்தில் வந்து செல்வது வழக்கம். கனமழை பொழிந்து வரும் சூழ்நிலை யில் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் முறையான கழிவு நீர் போக்கிகள் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாத காரணத்தால் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. குறிப்பாக தர்மபுரி கிருஷ்ணகிரி பெங்க ளூர் திருச்சி மதுரை உள்ளிட்ட தென் மாவட் டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பேருந்து பயணிகள் செல்ல முடியாத அவலம் ஏற்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையம் அதனை ஒட்டி உள்ள குப்தா நகர் குடியிருப்பு பகுதிக்குள் காட் டாற்று வெள்ளம் போல மழை நீர் சூழ்ந்துள்ள தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்ததோடு பொருட்களும் தண்ணீரில் மூழ்கியது. தமிழக அரசு மாநகராட்சி நிர்வாகம் உட னடியாக பிரச்சனையில் உரிய தலையீடு செய்து பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பய ணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.