சேலம், பிப்.12- சேலம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், நங்கவள்ளி பேரூராட்சி 1 ஆவது வார்டு பகுதியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.ராசாத்தி ராஜகோபால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் . இப்பிரச்சாரத்தில் சிபி எம் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட் டக்குழு உறுப்பினர்கள் ராஜாத்தி, ஜி.கவிதா, மு.பெரி யண்ணன், காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலாளர் எம்.எம்.ரத்னம், திமுகவின் வார்டு செயலாளர் பெரியதம்பி, சிபிஐ நகரச் செயலாளர் நடராஜ் மற்றும் முன்னாள் கவுன் சிலர் செல்வராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடு பட்டனர் . கன்னங்குறிச்சி பேரூராட்சி 13 ஆவது வார்டில் மார்க் சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.தேவி பழனிச்சாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் சிபிஎம் மாவட்ட செய லாளர் மேவை. சண்முகராஜா, திமுக நிர்வாகிகள் தமிழ ரசன், மகேந்திரன், குமார், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கள் பி.பன்னீர்செல்வம், ஆர். குழந்தைவேல், தாலுகா செய லாளர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முன் னணி ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். மேட்டூர் நகராட்சி 9 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.கருப்பண்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.இளங்கோ, மேட்டூர் கொளத்தூர் இடைக் கமிட்டி செயலாளர் எஸ்.வசந்தி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.எம்.தேவி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.