districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக

சேலம், செப்.10- தேர்தல் காலத்தில் தமிழக முதல் வர் அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடன டியாக நடைமுறைப்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ - ஜாக் அமைப் பினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து  செய்து பழைய ஓய்வூதிய திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொடக்க கல்வித்துறை யின் கட்டமைப்பை அடியோடு சீரழிப் பதாக உள்ள அரசாணை எண்:243ஐ ரத்து செய்ய வேண்டும். அரசு  பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் படும் சலுகைகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்க ளுக்கும் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாது காப்பு சட்டம் இயற்றப்பட வேண் டும். மாணவர்கள் நலன் கருதி உடன டியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாநகராட்சி கட்டுப் பாட்டில் இயங்கும் பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளை பள்ளி  கல்வித்துறையில் இணைக்க வேண் டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி டிட்டோ - ஜாக் அமைப்பினர் செவ்வாயன்று மாநி லம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டடத் திற்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி யின் மாவட்டத் தலைவர் த.சங்கர் தலைமை வகித்தார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட் டச் செயலாளர் ந.பெரியசாமி வர வேற்றார். இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்  பெ.கோவிந்தராசு, மாவட்டச் செய லாளர் ஆ.பாஸ்கரன், தலைவர் பிரபு, துணைச்செயலாளர்கள் வடி வேல், ராஜ்குமார், முன்னாள் தலை வர் கணேசன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் திருமுருகவேள், மாநில நிர்வாகி ஜெகநாதன் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், வெ.சரவணன் நன்றி கூறி னார். உதகை  நீலகிரி மாவட்டத்தில் உதகை  கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள மாவட்ட  கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு டிட்டோ - ஜாக்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். இதில், ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்ட முதன்மை  கல்வி அலுவலகம் முன்பு, தமிழ் நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (டிட்டோ - ஜாக்) சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப் பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.வீராசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நிர் வாகிகள் விநாயகம், விஜயலட்சுமி, மோகனசுந்தரம், கனகராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். டிஎன் பிடிஎப் மணிகண்டன் வரவேற்று பேசினார். இதில், டிட்டோ - ஜாக் நிர் வாகிகள் மா.ராஜசேகரன், ஆப்ர காம், எஸ்.தங்கராஜ், ரமேஷ் குமார் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மாநில துணைத்தலைவர் ஓ.கோ. செந்தில்குமார் ஆர்ப்பாட் டத்தை நிறைவு செய்து பேசினார். முடிவில், ப.ரங்கநாதமூர்த்தி நன்றி  கூறினார்.