திருப்பூர், ஜூன் 26- திருப்பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்காப் பொருட்கள் விற்ப னைக்காக வைக்கப்பட்டிருந்த 14 கடை களும் பூட்டி சீலிடப்பட்டதோடு. ரூ.3 லட் சத்து 75 ஆயிரம் அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகை யிலை கலந்த பான்மசாலா, குட்கா உள் ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் கடைகள் மூடி சீலிடப் படுவதோடு கடும் அபராதம் விதிக்கப் பட்டும் வருகிறது. அந்த வகையில் திருப் பூர் மாவட்டத்தில் தொடர் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அர சால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட் டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து புத னன்று கூட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அதில், 14 கடைகளிலிருந்து சுமார் 17 கிலோ கிராம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது ஆய்வின் போது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி 14 கடைகளும் பூட்டி சீலிடப்பட்டதோடு மேற்படி கடைகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் அபராதமாக விதிக்கப் பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றி லும் ஒழிக்கும் பொருட்டு ஹான்ஸ், குட்கா, கூல்லிப், பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை தடுக் கும் பொருட்டு முதல் முறையாக குட்கா விற்பனை செய்யும் குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 15 நாட்கள் கடையை மூடி சீலிடுதல், இரண்டாம் முறை குற்றத்திற்காக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு 30 நாட்களுக்கு கடையை மூடி சீலிடும் நடவடிக்கை யும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்திற் காக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டும், 90 நாட்களுக்கு கடையை மூடி சீலிட்டும் கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றது. மேலும் இந்நடவடிக்கையை தீவிர படுத்தும் பொருட்டு, மேற்படி தடை செய் யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் சேமித்து வைத்திருப்பது கண்ட றியப்பட்டால் கடைகள் உணவு பாது காப்பு உரிமம்/பதிவு சான்று ரத்து செய் யப்படும். மேலும் உள்ளாட்சித் துறை யில் வழங்கப்படும் ட்ரேடு லைசென்ஸ் ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப் பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஏது வாகும். பொதுமக்கள் தங்கள் பகுதி களில் இத்தகைய பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படு வதை உடனடியாக 9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது TN food safety consumer App என்ற செயலியில் பதிவேற்றம் செய்தோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவ ரின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப் படும் என தெரிவித்தார்.