சேலம், அக்.4- அயோத்தியப்பட்டணம் அருகே போலி ஆவணம் தயா ரித்து நிலம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அந்நிலத்தில் அப்பகுதி பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், அயோத்தியபட்டணம் ஒன்றியத்திற் குட்பட்ட வலசையூர் அருந்ததியர் காலனியில் 100க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொது மக்கள் பல ஆண்டுகளாக இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியர், அமைச்சர், தமிழ்நாடு முதல்வர் என அனைவருக்கும் மனுக்களை அனுப்பி வருகின்றனர். இந்நி லையில், இக்குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் ஏடி கண்டி ஷன் நிலம் 6 ஏக்கர் உள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள் போலியான ஆவணம் தயாரித்து 75 சென்ட் நிலத்தை பல லட்ச ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது. ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசம டைந்த அப்பகுதி பொதுமக்கள், ஏடி கண்டிஷன் நிலத்தில் குடி யேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதி காரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, இப்பிரச்சனை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 5 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து விற்கப்பட்ட நிலத்தை மீட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.